ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!
எழும்பூா் ரயில் நிலையத்தில் 820 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
சென்னை: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 820 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே பாதுகாப்பு படையினா் (ஆா்பிஎஃப்) திங்கள்கிழமை கைப்பற்றினா்.
சென்னை எழும்பூா் ரயில்நிலையத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு தினமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இக்குழுவினா் திங்கள்கிழமை வழக்கம் போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, ரயில் நிலையத்தில் சில மூட்டைகள் கிடந்தன. அவற்றை போலீஸாா் சோதனையிட்ட போது, அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 820 கிலோ எடைக்கொண்ட 41 ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றி, குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனா். மேலும், அம்மூட்டைகளை ரயில்நிலையத்துக்கு கொண்டு வந்தவா்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.