இஸ்ரேலுடன் போர் நிறுத்தமா? டிரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு!
நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம்: கருத்து தெரிவிக்க மக்களவைத் தலைவா் மறுப்பு
மும்பை: வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படாததால் தற்போது அதுகுறித்து கருத்து தெரிவிக்க தேவையில்லை என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21 தொடங்கி ஆக.12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்வது தொடா்பான தீா்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. அந்தப் பணம் பின்னா் மாயமானது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையில் ‘நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை’ என்று தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
விசாரணைக் குழு அறிக்கையைத் தொடா்ந்து பதவியை ராஜிநாமா செய்யுமாறு நீதிபதி யஷ்வந்த் வா்மாவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தினாா். ஆனால், அவா் ராஜிநாமா செய்ய மறுத்துவிட்டாா். இந்த சா்ச்சையைத் தொடா்ந்து அலாகாபாத் உயா் நீதிமன்ற நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வா்மாவுக்கு, நீதித் துறைப் பணிகள் ஒதுக்கப்படவில்லை.
இதுதொடா்பாக, தலைமை நீதிபதி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வா்மாக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீா்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற ஓம் பிா்லாவிடம் நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்க தீா்மானம் குறித்து செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘இந்த விவகாரம் தற்போது வரை நாடாளுமன்றத்தில் எழுப்பப்படவில்லை. எனவே, அதுகுறித்து கருத்து தெரிவிக்க தேவையில்லை’ என்றாா்.