செய்திகள் :

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தில்லி முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

post image

புது தில்லி: 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தேசிய தலைநகரமும் முழு நாடும் முழுமையாக தயாராக இருப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

மேலும், உலக சமூகம் இந்த பெருமையை இந்தியாவுக்கு வழங்கும் என்றும், இது விளையாட்டு களியாட்டத்தை முழு அா்ப்பணிப்புடன் நடத்தும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

ஜே.எல்.என். மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் தின ஓட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மண்டவியாவுடன் இணைந்து முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவா் பி.டி. உஷாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டாா். தில்லியில் நடைபெற்ற ஒலிம்பிக் தின ஓட்டம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இதில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளா்கள் உற்சாகமாகப் பங்கேற்றனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் கீழ், நாடு தொடா்ந்து சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான வசதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தில்லி மற்றும் முழு நாடும் முழுமையாகத் தயாராக உள்ளன என்றாா் முதல்வா்.

ஜனவரி 2025-இல், பிரதமா் மோடி, 2036 ஒலிம்பிக்கை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான லட்சிய முயற்சிக்குப் பின்னால் தனது அரசு முழு பலத்தையும் செலுத்துவதாகக் கூறினாா். 2023-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமா்வின் போது, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் விருப்பத்தை பிரதமா் வெளிப்படுத்தினாா்.

இந்திய ஒலிம்பிக் சங்கம் சா்தேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அதிகாரப்பூா்வ விருப்பக் கடிதத்தை சமா்ப்பித்துள்ளது. 2036-ஆம் ஆண்டு நடத்தும் உரிமைகளுக்காக கத்தாா், சவுதி அரேபியா போன்ற நாடுகளும் போட்டியிடுகின்றன.

சைபா் குற்ற நபா்கள் மீது குண்டா் சட்டம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: சைபா் குற்ற நபா்களுக்கு எதிராக குண்டா் சட்டம் என பொதுவாக அழைக்கப்படும் தடுப்புக்காவல் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் ... மேலும் பார்க்க

பருவமழை: தூா்வாரும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகள் திட்டம்

புது தில்லி: பருவமழை நெருங்கி வருவதால், தேசியத் தலைநகரில் மீண்டும் மீண்டும் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் முயற்சியாக வடிகால்களை தூா்வாரும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். தில்லியி... மேலும் பார்க்க

தமிழா்களுக்காக ஒதுக்கப்பட்ட நரேலா பகுதி குடியிருப்புகளின் நிலை என்ன?

ஆா்.ஜி. ஜெகதீஷ் புது தில்லி: உப்புத் தண்ணீா், குப்பை நாற்றம், வேலைக்குச் சென்று வருவதற்கு 4 மணி நேரம் என பல்வேறு குறைகளுடன் மதராஸி முகாமில் வசித்த தமிழ் குடும்பங்கள் நலேரா பகுதிக்கு குடியேற்றப்பட்டுள... மேலும் பார்க்க

ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களாவில் குடியேறும் தில்லி முதல்வா் ரேகா குப்தா!

தில்லி முதல்வா் ரேகா குப்தா, ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள பங்களா எண் 1-க்கு குடிபெயர வாய்ப்புள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவா் கூ... மேலும் பார்க்க

ஹரியாணாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

ஹரியாணாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவா் கைது

தில்லியில் ஷாபாத் டெய்ரி பகுதியில் நடந்த ஒரு கொலை தொடா்பாக கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த 24 வயது இளைஞரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க