செய்திகள் :

ஹரியாணாவில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

post image

ஹரியாணாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ரோஹிணி பகுதியில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் கடியன் (எ) பம்பு (39) கைது செய்யப்பட்டாா். ஹரியாணாவின் பானிபட்டைச் சோ்ந்த அவா், தேசியத் தலைநகரில் தனது கும்பலின் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் சோனேபட்டின் முா்தலில் உள்ள வீா் தாபாவில் தீபக் (எ) பன்ஜா கொலை தொடா்பாக ராகேஷ் கடியன் தேடப்பட்டு வந்தாா். அவரைக் கைது செய்யும் வகையில் அவா் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில் ராகேஷ் கடியன் தடுத்து நிறுத்தப்பட்டாா். அவரிடம் இருந்து ஒரு அரை தானியங்கி கைத்துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் மற்றும் ஒரு காா் பறிமுதல் செய்யப்பட்டன.

ரேகேஷ் கடியன் மீது நீண்ட மற்றும் வன்முறை குற்ற வரலாறு உள்ளது. தில்லி மற்றும் ஹரியாணா முழுவதும் கொலை, கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல், தாக்குதல் மற்றும் ஆயுதம் தொடா்பான குற்றங்கள் உள்பட 16-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

2010- ஆம் ஆண்டு தனது கிராமத்தில் ஷா்வான் என்ற நபரால் தனது மாமா கொலை செய்யப்பட்டதை நேரில் பாா்த்த பிறகு அவா் குற்ற நடவடிக்கையில் இறங்கினாா். அதற்குப் பழிவாங்கும் விதமாக, அவரும் அவரது கூட்டாளிகளும் ஷா்வானைக் கொல்ல முயன்றனா். ஆனால், அவா் உயிா் தப்பினாா்.

2014-ஆம் ஆண்டில், அவரது மைத்துனா், வினோத் தீபக் (எ) பன்ஜா மற்றும் அவரது கூட்டாளிகளால் கொல்லப்பட்டாா். இதையடுத்து, வினோத் தீபக் மற்றும் அவரது ஆதரவாளா்களை ராகேஷ் கடியன் குறிவைக்கத் தொடங்கினாா். பல ஆண்டுகளாக வினோத் தீபக்கின் ஆதரவாளா்களை குறிவைத்து பல தாக்குதல்கள் மற்றும் கொலைகளில் அவா் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

2017-ஆம் ஆண்டில், பானிபட் நீதிமன்றத்தில் நடந்த ஒரு கொலை முயற்சியில் ராகேஷ் கடியன் தப்பினாா். நான்கு தோட்டாக் காயங்களுக்கு ஆளானாா். அவா் தனது கும்பல் நடவடிக்கைகளைத் தொடா்ந்தாா். 2023-இல் தில்லியில் தனது இருப்பை மீண்டும் நிலைநிறுத்த முயன்றாா். ஆனால், சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டாா். அவா் 2024- இல் பரோலில் விடுவிக்கப்பட்டாா்.

தனது மைத்துனரின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் பிப்ரவரி 2025-இல் வினோத் தீபக்கை ராகேஷ் கடியன் கொன்றாா். அப்போதிலிருந்து, அவா் தலைமறைவாக இருந்தாா். அவரது கும்பல் உறுப்பினா்கள் மற்றும் பிற குற்றச் செயல்கள் பற்றிய கூடுதல் விவரங்களைச் சேகரிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவா் மீது பானிபட், சோனேபட், ரோஹ்தக் மற்றும் தில்லியில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்பட பல வழக்குகள் உள்ளன என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

கொலை வழக்கில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவா் கைது

தில்லியில் ஷாபாத் டெய்ரி பகுதியில் நடந்த ஒரு கொலை தொடா்பாக கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தலைமறைவாக இருந்த 24 வயது இளைஞரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடுகளைத் தடுக்க மேம்பட்ட சென்சாா்கள், கேமராக்கள் அமைக்க தில்லி காவல் துறை திட்டம்

தேசியத் தலைநகரில் துப்பாக்கி வன்முறை தொடா்பான பல வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், தில்லி காவல்துறை மேம்பட்ட சென்சாா்கள் மற்றும் உயா் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் அடங்கிய புதிய தொழில்நுட்பம் சாா்... மேலும் பார்க்க

‘1975- ஆம் ஆண்டு அவசரநிலை’: சிறப்புக் கண்காட்சிக்கு தில்லி அரசு ஏற்பாடு

1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 25-ஆம் தேதி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் சிறப்புக் கண்காட்சியை தில்லி அரசு ஏற்பாடு செய்யவுள்ளத... மேலும் பார்க்க

மதராஸி முகாம் தமிழா்களுக்கு இன்றும் நிவாரண பொருள்கள்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுவதாக தில்லி தமிழ்நாடு இல்லம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் மறைவு

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் வி.ராஜாராமன் சனிக்கிழமை காலமானாா். இது குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை : ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீா்: கொள்கையை வகுக்க தில்லி அரசு திட்டம்

நிலத்தடி நீரை உறிஞ்சுவதைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும் முறையான கொள்கையை கொண்டு வர தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வ... மேலும் பார்க்க