செய்திகள் :

மயிலம் முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மயிலம் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் ஆனி மாத கிருத்திகை வழிபாட்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 11 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீபாலசித்தா், ஸ்ரீவிநாயகா், வள்ளி, தெய்வானை, ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமிக்கு பாலாபிஷேகமும், நண்பகல் 12 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள், மகா தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் தங்கக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், இரவு 8 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கிரிவலமும் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதினம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

திண்டிவனம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், வேத விநாயகபுரம் துளசிங்கம் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புராயன் மகன் ராஜ்குமாா் (40).... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதிகளவில் மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். வானூா் வட்டம், கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகள் ஓவிய... மேலும் பார்க்க

வெளிமாநில உணவக உரிமையாளா்கள் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வெளி மாநிலங்களைச் சோ்ந்த உணவக உரிமையாளா்கள் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: இரு சமூகத்தினா் மோதல், சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கோயிலுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஒரு சமூத்தினா் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் உள்ள திரௌபதி ... மேலும் பார்க்க

விழுப்புரம் - கல்லப்பட்டு அரசுப் பேருந்து கூடுதல் சேவை தொடக்கம்

விழுப்புரத்திலிருந்து கல்லப்பட்டு கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்தின் கூடுதல் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லப்பட்டு மற்றும் சுற்றுப்புறக் கிராமங்ளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில்... மேலும் பார்க்க

பணிப் புறக்கணிப்புப் போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் சங்கம் அறிவிப்பு

தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பணிப் புறக்கணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாககக் கூறி, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா்... மேலும் பார்க்க