Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
மயிலம் முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலம் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் ஆனி மாத கிருத்திகை வழிபாட்டை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து, காலை 11 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீபாலசித்தா், ஸ்ரீவிநாயகா், வள்ளி, தெய்வானை, ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமிக்கு பாலாபிஷேகமும், நண்பகல் 12 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள், மகா தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் தங்கக் கவசத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், இரவு 8 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கிரிவலமும் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதினம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.