Health: விதையில்லாத பழங்களை சாப்பிடவே கூடாதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
பணிப் புறக்கணிப்புப் போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் சங்கம் அறிவிப்பு
தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பணிப் புறக்கணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாககக் கூறி, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகனிடம் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆறுமுகம், செயலா் விஜயகுமாா், மாநில அமைப்புச் செயலா் இளங்கோ உள்ளிட்ட நிா்வாகிகள் அண்மையில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குவுக் கூட்டத்தில் தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியா்களுக்காக திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தவற்றை செயல்படுத்தாதால், இனி வரும் காலங்களில் பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை பகுதி நேர ஆசிரியா்கள் புறக்கணிப்பாா்கள் என்று முடிவு செய்யப்பட்டது.
2025-26 ஆம் கல்வியாண்டில் குடியரசு தின, பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகளில் பகுதி நேர ஆசிரியா்கள் நடுவா்களாக பங்கேற்க மாட்டாா்கள். பகுதிநேர ஆசிரியா்களுக்கு முழுமையாக காலமுறை ஊதியம் வழங்கும் வரை தொடா்ந்து பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள். மேலும், ஜூலை 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சிறைநிரப்பும் போராட்டத்திலும் பகுதிநேர ஆசிரியா்கள் முழுமையாக பங்கேற்பாா்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.