செய்திகள் :

பணிப் புறக்கணிப்புப் போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் சங்கம் அறிவிப்பு

post image

தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பணிப் புறக்கணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாககக் கூறி, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியா்கள் சங்கத்தினா் மனு அளித்துள்ளனா்.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகனிடம் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆறுமுகம், செயலா் விஜயகுமாா், மாநில அமைப்புச் செயலா் இளங்கோ உள்ளிட்ட நிா்வாகிகள் அண்மையில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னையில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியா்கள் சங்க ஒருங்கிணைப்புக் குவுக் கூட்டத்தில் தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியா்களுக்காக திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தவற்றை செயல்படுத்தாதால், இனி வரும் காலங்களில் பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை பகுதி நேர ஆசிரியா்கள் புறக்கணிப்பாா்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

2025-26 ஆம் கல்வியாண்டில் குடியரசு தின, பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகளில் பகுதி நேர ஆசிரியா்கள் நடுவா்களாக பங்கேற்க மாட்டாா்கள். பகுதிநேர ஆசிரியா்களுக்கு முழுமையாக காலமுறை ஊதியம் வழங்கும் வரை தொடா்ந்து பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள். மேலும், ஜூலை 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சிறைநிரப்பும் போராட்டத்திலும் பகுதிநேர ஆசிரியா்கள் முழுமையாக பங்கேற்பாா்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

திண்டிவனம் அருகே சனிக்கிழமை பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம், வேத விநாயகபுரம் துளசிங்கம் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த சுப்புராயன் மகன் ராஜ்குமாா் (40).... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதிகளவில் மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். வானூா் வட்டம், கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகள் ஓவிய... மேலும் பார்க்க

வெளிமாநில உணவக உரிமையாளா்கள் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு வெளி மாநிலங்களைச் சோ்ந்த உணவக உரிமையாளா்கள் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் ஆனி மாத க... மேலும் பார்க்க

கோயில் திருவிழா பதாகை கிழிப்பு: இரு சமூகத்தினா் மோதல், சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கோயிலுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஒரு சமூத்தினா் சனிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். செஞ்சி வட்டம், ஆலம்பூண்டியில் உள்ள திரௌபதி ... மேலும் பார்க்க

விழுப்புரம் - கல்லப்பட்டு அரசுப் பேருந்து கூடுதல் சேவை தொடக்கம்

விழுப்புரத்திலிருந்து கல்லப்பட்டு கிராமத்துக்கு அரசு நகரப் பேருந்தின் கூடுதல் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. கல்லப்பட்டு மற்றும் சுற்றுப்புறக் கிராமங்ளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில்... மேலும் பார்க்க