பால்டிக் வானில் பறவையாய் பறக்கும் கனவுப் பயணம்! - குட்டி தேசங்களுக்கு ஒரு விசிட...
கல்லூரி மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி அதிகளவில் மாத்திரைகளை உள்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வானூா் வட்டம், கூத்தம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஏழுமலை மகள் ஓவியா (18). திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் உள்ள அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு இரண்டாமாண்டு படித்து வந்தாா். இவா் சனிக்கிழமை வீட்டிலிருந்த போது, வீட்டு வேலைகளை செய்யவில்லை என்று அவரது தாய் விஜயகுமாரி கண்டித்தாராம்.
இதனால், ஆத்திரமடைந்த ஓவியா வீட்டிலிருந்த மாத்திரைகளை அதிகளவில் உள்கொண்டு தற்கொலைக்கு முயன்றாராம். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.