பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடு...
கண்டிக்கிறேன் என்ற பெயரில் பயமுறுத்தியே வளர்த்துவிட்டாயே அப்பா? - மகனின் புலம்பல் | #உறவின்கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
நேசமிகு அப்பாவிற்கு,
நான் தொலைவில் இருந்து உனக்கு எழுதும் கடிதம் அல்ல இது.நீ நான் இப்போது கடிதம் எழுதி கொண்டிருக்கும் சுவருக்கு மறுபக்கத்தில் தான் இருக்கிறாய். ஆனாலும் இக்கடிதம் உன்னிடம் வந்து சேருவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. சிறுவயது முதலே நீ என்னை கண்டிக்கிறேன் என்ற பெயரில் பயமுறுத்தியே வளர்த்துவிட்டாய் .
இருபது வயது ஆகிவிட்டது எனக்கு இன்னமும் நமக்கு இடையில் பேச்சுமில்லை. அப்படியே இருவரும் பேச முற்பட்டாலும் பாதி சொற்கள் தொண்டைக்குள் சிக்கி மூழ்கி விடுகின்றன.

எனக்கு இன்று வரையும் வெளிப்படையாக மனிதர்கள் பேச பயம் தான் நீ எப்போதும் இப்படி தான் இருக்கிறாய் எனக்கு சமூகத்திடம் பேசவாவது கற்றுக்கொடுத்து இருக்கலாம்.
ஒருவேளை நீ இருசக்கர வாகனம் ஓட்டி பழகியிருத்தால் இன்று இருபது வயதில் வண்டி ஓட்டி பழக எவர் காலையும் பிடித்து இருக்க மாட்டேன்.
என் கனவெங்கும் இருசக்கர வாகனங்கள் விண்வெளிக்கு பயணப்பட்டு அனுதினமும் திருப்தியாக திரும்புகின்றன. உன்னை நான் குறை கூறவில்லை உனக்கு மனிதர்களோடு பேசி பழக்கமில்லை எனினும் உம்முடைய நகைச்சுவையை நான் இருட்டு அறையில் காது கொடுத்து கேட்டுள்ளேன் அங்கு தான் உனக்காக முதல்முறை சிரிக்கிறேன்.
வெளியூரில் கூட இருவரும் சந்திக்க நேர்ந்தாலும் எங்கு எதற்கு வந்தால் என்று கூட வார்தைகள் இதுவரை வந்ததில்லை. என் அக்கா ஒருமுறை அழைத்து உன்னிடம் சாப்டியா என்று கேட்க சொன்னாள்.
நானே ஒருகட்டத்தில் உன்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக்கொண்டிருந்த வேளையில் தான் அக்கா என்னிடம் இறுதியில் இவர்களை அனாதை ஆக்கிடாத என்று நான் உன்னிடம் பேசாததை எண்ணி சொன்னாள்.
நானே உன்னிடம் பேசினாலும் கூட இவர்கள் ஒப்புக்கு பேசுவதாகவே என்னை அவமானம் செய்கிறார்கள்.

இருவரும் அருகில் நின்று இன்று வரை ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொண்டதில்லை .நீ ஒருநாளும் திரையரங்குக்கு சென்றதில்லை அவை எவ்வாறு இருக்குமென்று கூட உனக்கு தெரியாது. நான் ஒரு எழுத்தாளர் ஆனால் நான் என்ன எழுதுகிறேன் என்று கூட உனக்கு தெரியாது.
நான் நகரத்தில் படிக்கும் காலகட்டத்தில் அங்க பரவாலயா என்று கூட கேட்டதில்லை .
என்னால் உனக்கு எதுவுமே இதுவரை செய்ததில்லை இக்கவிதை உனக்கு சமர்க்கிறேன்

இக்கவிதை என் சாவில் காற்றில் முணுமுணுக்கட்டும்.
'உலகப்போரே நீ இன்னமும் தொடர்வதேனோ..
சாப்டியா ,தூங்கு, என்று
கேட்டாவது இந்த போரை
சமாதானம் செய்...
நீ யாரோட பையன் என்று
யாராவது கேட்கும் போது
சலனமாக உன் பெயர்
வாயிலிருந்து விழ வேண்டும்.
நீ பேசாம இருந்தே அவர கொண்ணுடியேனு பழி
வரிசைக் கட்டி நிற்கலாம்.
நான் இறந்த பிறகே நீ இறக்க வேண்டும் .
என் சாவில் நீ என்னை மறக்காமல் கட்டி தழுவ வேண்டும் .
மீண்டுமொரு முறை பிறப்பெடுப்போம் தந்தையும் மகனாக.
ஊமையாக பிறந்திடுவோம்
இந்த பரந்த உலகில் நம் குரல்
எட்டுத்திக்கும் கேட்கட்டும்.
பேச ஆசையாய் இருக்கிறது
கனவில் காத்திருக்கிறேன்
நிஜம் போல பயம் காட்டாமல் வா'
இப்படிக்கு
உங்கள் ஊமை மகன்
நா.லோகேஸ்
