செய்திகள் :

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

post image

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 முக்கிய  அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது இந்த போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதலை ஈரான் இத்துடன் நிறுத்திக்கொள்ளாவிட்டால், கடுமையான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதேநேரத்தில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 6 விமான நிலையங்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதத்தாக்குதலின்போது ஈரானின் எப்-14, எப்-5 மற்றும் ஏஹெச்-1 விமானங்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் விமானநிலையத்தின் ஓடுபாதை, சுரங்கப்பாதை, எரிபொருள் நிரப்ப பயன்படும் விமானமும் சேதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவதையும் ஈரானின் விமானப்படை செயல்பாட்டையும் இஸ்ரேல் சீர்குலைத்துள்ளது என்றும் கூறியுள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷியா சென்று அதிபர் புதினை சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமேனி

பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!

அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்gபே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறி வரும் நிலையில் அது ப... மேலும் பார்க்க

அமெரிக்கா முதன்முதலாகப் பயன்படுத்திய பங்கர் பஸ்டர்! பெயரிலேயே பயம் காட்டும் குண்டுகள்!

ஈரானில் உள்ள அணு ஆயுத உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது உலகளவில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்தியிருக்கும் பங்கர் பஸ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமெனி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்... மேலும் பார்க்க

சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 22 பேர் பலி

டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் பிரார்த்தனை செய்துகொண... மேலும் பார்க்க

அமெரிக்க தாக்குதல்: ஈரானுக்கு இருக்கும் வழிகள்!

ஈரான் கடந்த பல்லாண்டுகளாக உள்நாட்டிலும், பிராந்தியம் முழுவதும் பல அடுக்கு ராணுவத் தளங்களை கட்டமைத்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை இவை தடுத்து வந்தன. இந்நிலையில், இஸ்ரேலுடனான ஈரான... மேலும் பார்க்க

ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின... மேலும் பார்க்க