செய்திகள் :

'ரோஹித்தும், கோலியும் 2027 உலகக்கோப்பையில் பங்கேற்பது கடினம் - சவுரவ் கங்குலி சொல்லும் காரணம் என்ன?

post image

2027-ம் ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் இடம்பெறுவது கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

14-வது உலகக்கோப்பை 2027-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற கோலி, ரோஹித் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து கங்குலி பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “அந்த உலகக்கோப்பை நடக்கும்போது விராட் கோலிக்கு 38, ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகியிருக்கும்.

ஏற்கெனவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட இருவருக்கும், 2027-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெறுவது எளிதான விஷயமாக இருக்காது.

அடுத்த உலகக் கோப்பை வரை இந்தியா, இன்னும் 27 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. அதன்படி பார்த்தால் இருவரும் அடுத்த 2 ஆண்டுகளில் தலா 15 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அற்புதமான கிரிக்கெட் வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விராட் கோலி - ரோஹித்
விராட் கோலி - ரோஹித்

ஆனால், 2027-ம் ஆண்டு வரை அவர்கள் முழுமையான உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அது கடினமான விஷயம். அதற்கேற்ப அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று சவுரவ் கங்குலி தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ENG vs IND: `ரெட்டைக் கதிரே...' - சதமடித்து இந்தியாவை மீட்ட Classy ராகுல், Beast பண்ட்!

இங்கிலாந்து vs இந்தியா முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் 471 ரன்கள் குவித்தது இந்தியா.அதேபோல், பவுலிங்க... மேலும் பார்க்க

ENG vs IND: `கேட்ச் விட்டதுக்காக உட்கார்ந்து அழ முடியாது!' - பும்ரா பேசியது என்ன?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.ind vs engஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில... மேலும் பார்க்க

ENG vs IND: பண்ட் சாதனை சதம்; அபாரம் காட்டிய ஜோஷ் டங், போப்; சீறிய Boom Boom பும்ரா | 1st Test Day 2

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 20) தொடங்கியது.முதல் நாள் முடிவில் ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தால் 3 விக்கெட்... மேலும் பார்க்க

TNPL-2025: நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி லைக்கா கோவை கிங்ஸ் அணி வெற்றி!| Photo Album

TNPL-2025: நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி லைக்கா கோவை கிங்ஸ் அணி வெற்றி.!TNPL-2025: நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி லைக்கா கோவை கிங்ஸ் அணி வெற்றி.! மேலும் பார்க்க

கேப்டனாக முதல் டெஸ்ட்டிலேயே கில் சதம்; ஆனாலும் அபராதம் விதிக்கப்போகிறதா ICC; காரணம் என்ன?

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர்.அணியின் ஸ்கோர் 10... மேலும் பார்க்க

தனது மருத்துவ சோதனை முடிவுகளை வெளியிட்ட திருநங்கை வீராங்கனை அனயா பங்கர்; BCCI, ICC-யின் பதில் என்ன?

Pஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர், தன்னைப்போன்ற வீராங்கனைகளை மகளிர் கிரிக்கெட்டில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு தனது மர... மேலும் பார்க்க