செய்திகள் :

காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்குத் தடை விதிக்கும் இஸ்ரேல்!

post image

உண்மையை மறைப்பதற்காக காஸாவில் சர்வதேச ஊடகங்களுக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் தேசிய செய்தித்தாளின் இளம் ஆசிரியராக இருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த பியர்ஸ் மோர்கன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதல் குறித்து கத்தாருக்குச் சொந்தமான அல்ஜஸீரா செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பியர்ஸ் மோர்கன், காஸா உடனான போரில் இஸ்ரேலின் விதிமீறல் நடவடிக்கைகள் குறித்துக் கூறினார்.

அவர் பேசியதாவது, ''கடந்த மூன்று மாத கால போரில் காஸாவில் குழந்தைகள், பெண்கள் இடையே பட்டினிக் கொடுமை அதிகரித்துள்ளது. பிறகு, உணவு உள்ளிட்ட சிறிய அளவிலான மனிதாபிமான அடிப்படை உதவிகள் பெரும்பாடுபட்டு உள்ளே நுழைந்தது.

அதனைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தபோது அவர்கள் மீது இஸ்ரேல் வீரர்கள் வெளிப்படையாக துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இது குறித்து அடுக்கடுக்கான கேள்களை முன்வைக்கலாம்.

ஆனால், இஸ்ரேல் என்ன செய்கிறது? சர்வதேச பத்திரிகையாளர்களை அனுமதிப்பதற்கு தொடர்ந்து மறுக்கிறது. பிபிசி உள்ளிட்ட பிரபலமடைந்த பல்வேறு சர்வதேச செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்களில் ஒருவரைக் கூட காஸாவினுள் இஸ்ரேல் அனுமதிப்பதில்லை.

காஸாவில் உணவுக்காக போராடும் அந்நாட்டு மக்கள்

காஸாவில் ஒரு ஊடகம் கூட இருக்கக் கூடாது என இஸ்ரேல் நினைக்கிறது. உண்மையில் காஸாவில் என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்ய அவர்கள் (இஸ்ரேல்) விரும்பவில்லை. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால், ஊடகங்களுக்கு அனுமதி கொடுங்கள்'' எனக் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஈரான் - இஸ்ரேல் இடையே தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

எனினும், காஸாவின் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவிடவில்லை. ஈரான் உடன் ஆயுதங்களை ஏவி சண்டியிட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலும் காஸா முகாம்களில் உள்ள மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று முதல் இஸ்ரேலின் தாக்குதலுக்கு காஸாவில் இதுவரை 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 56,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?

அமெரிக்காவுக்கும் பதிலடி; ஈரான் அதிரடி! ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்!

கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.மத்திய வளைகுடாவில் உள்ள கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளமான அல்-உதெய்த் (Al Udeid) தளத்தை குறிவ... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்தது பிரான்ஸ்!

ஈரான் உடன் போரில் ஈடுபட்டுள்ளதால் இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களை ஜூலை 14ஆம் தேதி வரை ரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.இது குறித்து பேசிய பிரெஞ்சு ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்,... மேலும் பார்க்க

அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே: ஃபரூக் அப்துல்லா கண்டனம்!

ஸ்ரீநகர்: அமெரிக்கா, இஸ்ரேலின் அடுத்த குறி அரபு நாடுகளே என்று ஃபரூக் அப்துல்லா பேசியிருக்கிறார். இதன்மூலம், தேசிய மாநாட்டு(என் சி) கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா அரபு நாடுகளுக்கு இன்று(ஜூன் 23) எச்சர... மேலும் பார்க்க

ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?

கத்தாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது பதற்றமான சூழலை பிரதிபலிக்கவில்லை எனவும் கத்... மேலும் பார்க்க

ஈரானுக்கு உதவத் தயார்! அமெரிக்க தாக்குதலுக்கு கடும் கண்டனம்! - ரஷியா

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் கடும் கண்டனம் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன்... மேலும் பார்க்க

பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!

அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்gபே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறி வரும் நிலையில் அது ப... மேலும் பார்க்க