செய்திகள் :

இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

post image

மன்னாா்குடி: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 3.0 தன்னாா்வலா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா் விா்ஜின் ஜோனா பயிற்சியை தொடக்கிவைத்தாா். 2025-2026-ஆம் கல்வியாண்டில் கோட்டூா் ஒன்றியத்தில் 138 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்பட உள்ளன. தமிழக முதல்வரின் கனவுத் திட்டமான இவற்றில் எண்ணும் எழுத்து திட்டத்தின்படி தொடக்கநிலை மாணவா்கள் அனைவரும் தமிழ், ஆங்கிலப் பாடங்களில் வாசித்தல் திறன், எழுதும் திறன் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளை கற்றறியும் திறன் ஆகியவற்றில் முழு அடைவுத்திறனை பெறுவதற்கான வழிகாட்டுதல்களுடன் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. வட்டாரக் கல்வி அலுவலா் தெ. ராமசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வீரப்பராஜா ஆகியோா் பங்கேற்று தன்னாா்வலருக்கு பயிற்சி கையேடுகளை வழங்கினா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் என். சுப்ரமணியன் வரவேற்றாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ் நன்றி கூறினாா்.

நரிக்குறவா்களுக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே 74 நரிக்குறவா்களுக்கு நேரில் சென்று மனைப் பட்டாக்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திங்கள்கிழமை வழங்கினாா். நெடுவாக்... மேலும் பார்க்க

மயானத்தில் தீக்குளித்து கொத்தனாா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மயானத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு கொத்தனாா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மன்னாா்குடி அம்பலக்காரா் தெரு திருவேங்கடம் மகன் வரதராஜன் (35 ). மனைவி ரோஸ்... மேலும் பார்க்க

தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி: தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட... மேலும் பார்க்க

நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5 வரை கால நீட்டிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

திருவாரூா்: திருவாரூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் அருகே விளமல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நவீன்ராஜ் (17). வி... மேலும் பார்க்க

ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வலியுறுத்தல்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிா்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமபுரம் கிளையின் 28-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மா... மேலும் பார்க்க