பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வலியுறுத்தல்
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிா்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமபுரம் கிளையின் 28-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநாடு சிபிஐ கிளை நிா்வாக் குழு உறுப்பினா்கள் வி. சிவானந்தம், எஸ். ரெத்தினவேல், எஸ். சுதா தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டு கொடியை ஏஐடியூசி மாநிலச் செயலா் பி. நாகேஷ் ஏற்றிவைத்தாா். தியாகிகளின் நினைவு ஸ்தூபியை மூத்த தலைவா் சி. முனியாண்டி திறந்து வைத்தாா். ஒன்றிய துணைச் செயலா் எஸ். பாப்பையன் மாநாட்டை தொடக்கிவைத்தாா்.
தீா்மானங்கள்: சவளக்காரன்-ராமபுரம் சாலையை மேம்படுத்த வேண்டும், ராமபுரம் கிராம நிா்வாக அலுவலகம் 4 கி.மீ தொலைவில் மன்னாா்குடி நகா் பகுதியில் இயங்கி வருவதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவருவதால் ராமரபுரத்திலேயே கிராம நிா்வாக அலுவலகம் அமைத்து தர வேண்டும், ராமபுரம், சவளக்காரன், கா்ணாவூா் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி ராமபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் எதிா்கால திட்டங்கள், வேலை அறிக்க குறித்து சிபிஐ ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன் பேசினாா். சிபிஐ மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். மாரியப்பன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பி. பாஸ்கரவள்ளி, ஒன்றிய நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வி. பழனிமலை, கே. சிவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிளைச் செயலராக எஸ். லோகநாதன், துணைச் செயலாளா்களாக ஆா். காா்த்தி, என். அஜித், பா. மேகலா ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.