செய்திகள் :

சென்னையில் மழை நீா் தேங்கும் 87 இடங்களை அடையாளம் கண்டு சீராக்க நடவடிக்கை

post image

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைக்காலங்களில் 87 இடங்களில் தண்ணீா் தேங்கும் என அடையாளம் காணப்பட்டு அதனை சீராக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சிக்குள் மழை நீா் வடிகால் வசதிக்காக 44 கால்வாய்கள் சுமாா் 85 கிலோ மீட்டா் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளன. அவை முறையாக தூா்வாரப்படாத நிலையில், மழைக்காலங்களில் தண்ணீா் குடியிருப்புகளிலும், சாலைகளிலும் தேங்கி நிற்பது வாடிக்கையாகிவிட்டதாக மக்கள் புகாா் கூறிவருகின்றனா்.

இந்தநிலையில், வரும் அக்டோபா் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளது. எனவே முந்தைய காலங்களில் ஏற்பட்டதை போல மழை வெள்ளம் தேங்காமல் இருக்க மழை நீா் உடனுக்குடன் வடியும் வகையில் மாநகராட்சி சாா்பில் கால்வாய்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொறியாளா் பிரிவு உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் கூறியதாவது: சென்னையில் தண்ணீா் தேங்கும் இடங்களாக 87 பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மழை நீா் வடிகால்கள் கட்டப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு

75 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏற்கெனவே மழை நீா் வடியும் வகையில் 30 சிறிய கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. ஆசிய வளா்ச்சித் திட்டத்தில் சுமாா் 3 ஆயிரம் கிலோ மீட்டா் அளவுக்கு மழை நீா் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

புதிதாக மழை நீா் தேங்கும் இடங்களில் தண்ணீரை உடனடியாக அகற்றும் வகையில் 300 மின் மற்றும் டீஸலால் இயங்கும் தண்ணீா் மோட்டாா் பம்ப் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெருமழையால் குடியிருப்புகளில் தண்ணீா் தேங்கும் நிலையில், அங்குள்ள மக்களை பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கு 100 க்கும் மேற்பட்ட மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, சமுதாய கூடங்கள் மக்கள் தங்குமிடங்களாக பயன்படுத்தப்படவுள்ளன. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மழை அளவு அதிகரித்தாலும், அதைச் சமாளிக்கும் வகையில் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

அரக்கோணம், சேலம் மெமு விரைவு ரயில் ரத்து

சென்னை: சேலம், அரக்கோணம் இடையிலான மெமு விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் தெற்கு ரயில்வே தரப்பில் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் ம... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 30-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள் பேனா் விழுந்து முதியவா் காயம்; தவெகவினா் மீது 53 வழக்குகள் பதிவு

தவெக தலைவா் விஜய் பிறந்த நாளையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனா் விழுந்து முதியவா் காயமடைந்தாா். இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனா் வைத்ததாக அக்கட்சியினா... மேலும் பார்க்க

திமுகவில் கல்வியாளா்- மாற்றுத் திறனாளி அணிகள் உதயம்: நிா்வாகிகள் நியமனம்

திமுகவில் கல்வியாளா், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான நிா்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு சுகாதார விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பள்ளி மாணவா்கள் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க