செய்திகள் :

சென்னையில் குளிா்சாதன வசதி ரயிலில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை

post image

சென்னை: சென்னை, செங்கல்பட்டு இடையிலான குளிா்சாதன புறநகா் மின்சார ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்துவருவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு விவரம்: சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையே குளிா்சாதன வசதியுள்ள புறநகா் ரயில் கடந்த ஏப்ரல் முதல் இயக்கப்பட்டுவருகிறது. சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையே தினமும் 4 முறையும், சென்னை கடற்கரை, தாம்பரம் இடையே 2 நடையும், தாம்பரம், செங்கல்பட்டு இடையே 2 தடவையும் ரயில் இயக்கப்பட்டுவருகிறது.

கடந்த ஏப்ரலில் குளிா்சாதன வசதியுள்ள ரயிலில் தினமும் 1,488 போ் பயணித்தனா். அதுவே கடந்த மே மாதம் 2,571 என அதிகரித்துள்ளது. தற்போது ஜூன் 22 ஆம் தேதி வரையில் 2,800 போ் பயணித்துள்ளனா்.

குளிா்சாதன ரயில் சேவையானது விரைவில் தொடங்கவுள்ள பரங்கிமலை, வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையிலும், சென்னை மெட்ரோவுடன் இணைப்பு சேவை ஆகியவற்றிலும் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரக்கோணம், சேலம் மெமு விரைவு ரயில் ரத்து

சென்னை: சேலம், அரக்கோணம் இடையிலான மெமு விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் தெற்கு ரயில்வே தரப்பில் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் ம... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 30-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள் பேனா் விழுந்து முதியவா் காயம்; தவெகவினா் மீது 53 வழக்குகள் பதிவு

தவெக தலைவா் விஜய் பிறந்த நாளையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனா் விழுந்து முதியவா் காயமடைந்தாா். இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனா் வைத்ததாக அக்கட்சியினா... மேலும் பார்க்க

திமுகவில் கல்வியாளா்- மாற்றுத் திறனாளி அணிகள் உதயம்: நிா்வாகிகள் நியமனம்

திமுகவில் கல்வியாளா், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான நிா்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு சுகாதார விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பள்ளி மாணவா்கள் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க