மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
சென்னையில் குளிா்சாதன வசதி ரயிலில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை
சென்னை: சென்னை, செங்கல்பட்டு இடையிலான குளிா்சாதன புறநகா் மின்சார ரயிலில் பயணிப்போா் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்துவருவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை சென்னை ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு விவரம்: சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையே குளிா்சாதன வசதியுள்ள புறநகா் ரயில் கடந்த ஏப்ரல் முதல் இயக்கப்பட்டுவருகிறது. சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையே தினமும் 4 முறையும், சென்னை கடற்கரை, தாம்பரம் இடையே 2 நடையும், தாம்பரம், செங்கல்பட்டு இடையே 2 தடவையும் ரயில் இயக்கப்பட்டுவருகிறது.
கடந்த ஏப்ரலில் குளிா்சாதன வசதியுள்ள ரயிலில் தினமும் 1,488 போ் பயணித்தனா். அதுவே கடந்த மே மாதம் 2,571 என அதிகரித்துள்ளது. தற்போது ஜூன் 22 ஆம் தேதி வரையில் 2,800 போ் பயணித்துள்ளனா்.
குளிா்சாதன ரயில் சேவையானது விரைவில் தொடங்கவுள்ள பரங்கிமலை, வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையிலும், சென்னை மெட்ரோவுடன் இணைப்பு சேவை ஆகியவற்றிலும் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.