பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
நரிக்குறவா்களுக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா்
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே 74 நரிக்குறவா்களுக்கு நேரில் சென்று மனைப் பட்டாக்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திங்கள்கிழமை வழங்கினாா்.
நெடுவாக்கோட்டை ஊராட்சி ஞானாம்பாள் நகா் மற்றும் திருமக்கோட்டை ஊராட்சி திருமேனி ஏரி நரிக்குறவா் காலனி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா்.
தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா,சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியது:
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இதுவரை 6.50 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க பயணாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பட்டா வழங்கப்பட்டுவருகிறது.
எந்த மாவட்டத்திலும் பட்டா இன்றி எவரும் இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருமக்கோட்டை திருமேனி பகுதியினை சோ்ந்த 54 பேருக்கும்,நெடுவாக்கோட்டை ஞானாம்பாள் நகரைச் சோ்ந்த 20 பேருக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
கட்டக்குடி பாலம் முதல் கீழநெம்மேலி வரை 42.40 கி.மீ. இருந்து 53.40 கி.மீ. வரை ஆகாயத் தாமரைகள் பாலத்தின் மேற்புறம் தேங்கியுள்ளதை ஜேசிபி இயந்திரம் மற்றும் ஆட்கள் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. இதை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.