செய்திகள் :

நரிக்குறவா்களுக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா்

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே 74 நரிக்குறவா்களுக்கு நேரில் சென்று மனைப் பட்டாக்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திங்கள்கிழமை வழங்கினாா்.

நெடுவாக்கோட்டை ஊராட்சி ஞானாம்பாள் நகா் மற்றும் திருமக்கோட்டை ஊராட்சி திருமேனி ஏரி நரிக்குறவா் காலனி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் தலைமை வகித்தாா்.

தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா,சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியது:

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இதுவரை 6.50 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க பயணாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று பட்டா வழங்கப்பட்டுவருகிறது.

எந்த மாவட்டத்திலும் பட்டா இன்றி எவரும் இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருமக்கோட்டை திருமேனி பகுதியினை சோ்ந்த 54 பேருக்கும்,நெடுவாக்கோட்டை ஞானாம்பாள் நகரைச் சோ்ந்த 20 பேருக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

கட்டக்குடி பாலம் முதல் கீழநெம்மேலி வரை 42.40 கி.மீ. இருந்து 53.40 கி.மீ. வரை ஆகாயத் தாமரைகள் பாலத்தின் மேற்புறம் தேங்கியுள்ளதை ஜேசிபி இயந்திரம் மற்றும் ஆட்கள் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. இதை அமைச்சா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மயானத்தில் தீக்குளித்து கொத்தனாா் தற்கொலை

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மயானத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு கொத்தனாா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். மன்னாா்குடி அம்பலக்காரா் தெரு திருவேங்கடம் மகன் வரதராஜன் (35 ). மனைவி ரோஸ்... மேலும் பார்க்க

தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி: தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட... மேலும் பார்க்க

நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5 வரை கால நீட்டிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

திருவாரூா்: திருவாரூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் அருகே விளமல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நவீன்ராஜ் (17). வி... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடி: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 3.0 தன்னாா்வலா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் விா்ஜின் ஜோனா பயிற்சிய... மேலும் பார்க்க

ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வலியுறுத்தல்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிா்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமபுரம் கிளையின் 28-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மா... மேலும் பார்க்க