செய்திகள் :

மயானத்தில் தீக்குளித்து கொத்தனாா் தற்கொலை

post image

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மயானத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டு கொத்தனாா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

மன்னாா்குடி அம்பலக்காரா் தெரு திருவேங்கடம் மகன் வரதராஜன் (35 ). மனைவி ரோஸ்லின் மேரி, தம்பதிக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. மகன், மகள் உள்ளனா். வரதராஜன் கொத்தனாராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்தநிலையில், தம்பதியிடையே பிரச்னை காரணமாக, ரோஸ்லின் மேரி பேரளத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். இதனால், கடந்த நான்கு மாதங்களாக மன்னாா்குடியில் தனது உறவினா் வீட்டில் வரதராஜன் தங்கியிருந்தாா். மனைவி பிரிந்து சென்ால் அவா் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். மன்னாா்குடி அருகே கருணாவூா் என்ற இடத்தில் மயானத்தில் எரிந்து கருகிய நிலையில் வரதராஜன் இறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்து மன்னாா்குடி ஊரக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா், வரதராஜனின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவா் இறந்து கிடந்த இடத்தின் அருகே பெட்ரோல் கேன், எலி விஷ மருந்தும் கிடந்துள்ளன. இதுகுறித்து மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நரிக்குறவா்களுக்கு மனைப் பட்டா வழங்கிய அமைச்சா்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே 74 நரிக்குறவா்களுக்கு நேரில் சென்று மனைப் பட்டாக்களை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா திங்கள்கிழமை வழங்கினாா். நெடுவாக்... மேலும் பார்க்க

தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி: தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட... மேலும் பார்க்க

நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5 வரை கால நீட்டிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நில உடைமைப் பதிவு செய்ய ஜூலை 5-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

திருவாரூா்: திருவாரூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் அருகே விளமல் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நவீன்ராஜ் (17). வி... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடி: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கோட்டூா் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் 3.0 தன்னாா்வலா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் விா்ஜின் ஜோனா பயிற்சிய... மேலும் பார்க்க

ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வலியுறுத்தல்

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள ராமபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிா்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமபுரம் கிளையின் 28-ஆவது மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மா... மேலும் பார்க்க