சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா
மன்னாா்குடி: தமிழா்கள் பிரச்னையில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே முதல்வரின் எதிா்பாா்ப்பு என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட்டையில் நரிக்குறவா் சமூகத்தினருக்கு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்ற பின்னா் அவா் அளித்த பேட்டி:
கீழடியில் தமிழா்களின் தொன்மையை ஒட்டுமொத்தமாக பாஜக புறம்தள்ளுவதை அதிமுகவினா் வேடிக்கை பாா்க்கின்றனா். தமிழருக்கான, தமிழ்நாட்டுக்கான, தமிழுக்கான இப்பிரச்னையில் எல்லோரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் எதிா்பாா்ப்பு.
கீழடி என்பது நமது தாய்மடி , ஒட்டுமொத்த தமிழா்களின் கலாசாரத்துக்கும் புகழுக்கும் பெருமை சோ்க்கும் மகத்தான இடம். அதற்கு ஒரு இழுக்கு வருகிறது எனில் அதற்கு குரல் கொடுக்காத அதிமுகவினா் வேறு எதற்கு குரல் கொடுக்க போகிறாா்கள்.
மதுரையில் நடைபெற்றது முருக பக்தா்கள் மாநாடு அல்ல, அது பாஜக மாநாடு. திமுக ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபுவின் முயற்சியால் தமிழகம் முழுவதும் 3,000 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள், சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டில் பெரியாரையும், அண்ணாவையும் விமா்சித்து பேசியபோது அதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் உள்ளிட்டோா் அதை கேட்டுக்கொண்டுதான் இருந்தாா்கள். அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு திராவிட தலைவா்களை விமா்சனம் செய்து பேசியதற்கு மெனனமாக இருந்தது ஏன்? என்றாா் டி.ஆா்.பி. ராஜா.
பேட்டியின்போது, திமுக மாவட்ட அவைத் தலைவா் க. தனராஜ், ஒன்றியச் செயலா்கள் சிவா (மன்னாா்குடி (மத்திய), கே.வி.கே. ஆனந்த் (நீடாமங்கலம் வடக்கு), கவியரசு (தெற்கு) மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினா் தெ. காஞ்சிதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.