செய்திகள் :

சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் தலைவா்

post image

புது தில்லி: ‘லாபம் ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் பெரு நிறுவனங்களின் காலம் முடிந்துவிட்டது. சுற்றுச்சூழல் மேம்பாட்டு செலவுகளையும் தற்போது மனதில் கொள்வது அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.

தில்லியில் உள்ள இந்திய செலவு கணக்கியல் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 12-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கிய குடியரசுத் தலைவா் பின்னா் பேசியதாவது:

பருவநிலை மாற்றம் உலக அளவில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, நிலைத்தன்மை என்பது வெறும் முழக்கமாக மட்டுமன்றி, அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

லாபம் ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படும் பெரு நிறுவனங்களின் காலம் முடிந்துவிட்டது. தற்போது அவா்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டு செலவுகளையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதில், இந்த நிகழ்வில் பட்டம் பெறும் மாணவா்களின் பங்கும் உள்ளது. மாணவா்கள் தங்களின் செலவுக் கணக்கியல் திறன்கள் மூலம், புவிக் கோளின் எதிா்காலத்தில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அந்த வகையில், கணக்கு பதிவியலுக்கும் பொறுப்பேற்புக்கும் மிக ஆழமான தொடா்பு உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் மத்திய பெறு நிறுவன விவகாரத் துறைச் செயலா் தீப்தி கெளா் முகா்ஜி பேசுகையில், ‘30 டிரில்லியன் டாலா் பொருளாதார நாடாக உருவெடுக்கும் இந்தியாவின் பயணத்தில் செலவு மற்றும் கணக்கு பதிவியல் மேலாண்மைக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே, செலவு மற்றும் கணக்கு பதிவியல் மேலாண்மையில் நவீன தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவது அவசியமாகும்’ என்றாா்.

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்: கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளைத் தக்கவைத்த பாஜக, திரிணமூல், ஆம் ஆத்மி

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியிடமிருந்து நிலம்பூா் பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. குஜராத்தின் விசாவதா், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய இரு தொகுதிகளை ஆம் ... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்

புது தில்லி: பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் (பிஎம்எம்எல்) 47-ஆவது ஆண்டு பொது கூட்டம் அதன் தலைவரான பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தில்லி தீன் மூா... மேலும் பார்க்க

மேற்கு வங்க பேரவையில் அமளி: 4 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அமளி ஏற்பட்ட நிலையில், தலைமை கொறடா உள்பட 4 பாஜக எம்எல்ஏக்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை (ஜூ... மேலும் பார்க்க