செய்திகள் :

பங்கர் பஸ்டர் வேஸ்ட்.. முன்பே வெளியேற்றப்பட்ட யுரேனியம்: டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் ஈரான்!

post image

அமெரிக்கா, பங்கர் பஸ்டர் குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்gபே, ஃபார்டவ் அணுசக்தி மையத்திலிருந்து 400 கிலோ கிராம் யுரேனியத்தை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டதாக ஈரான் கூறி வரும் நிலையில் அது பற்றி இஸ்ரேல் அதிகாரிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் 3 ஆணு சக்தி மையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொண்டன. இதி அந்த மையங்கள் கடுமையாகச் சேதமடைந்ததாக அமெரிக்கா தெரிவித்தது. தாக்குதல் வெற்றி என்றும், போர் விமானங்கள் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அணுசக்தி மையங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் முன்பே கணித்திருந்து, யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

இதையே, இஸ்ரேலிய அதிகாரிகளும் உறுதி செய்திருக்கிறார்கள். அதாவது, ஈரானின் அணு சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை ஈரான் முன்பே கணித்து யுரேனியத்தை பாதுகாப்பான இடத்துக்கு இடம்மாற்றியிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

400 கிலோ கிராம் எடையுள்ள யுரேனியத்தையும், அதில் 60 சதவீதம் செரிவூட்டப்பட்ட யுரேனியமும் இருந்துள்ளது. மேலும் 90 சதவீத தளவாளங்களும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஈரானுக்கு, அமெரிக்கப் படைகளை அனுப்புவது குறித்து முடிவெடுக்க நேரம் கேட்டிருந்தபோதே, ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால், அணுக் கதிர்வீச்சு அபாயம் ஏற்படலாம் என்று உலகமே அஞ்சிய நிலையில், அதுபோன்ற எந்த அபாயத்துக்குரிய பொருள்களும் அங்கு இல்லை என்று ஈரான் தெரிவித்திருப்பதே இதனை உறுதி செய்வதாகவும் தெரிகிறது. அமெரிக்கா தாக்குதலில் முதல் இலக்காக ஃபார்டவ் இருந்துள்ளது. இங்கு அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படலாம் என்று நம்பப்படுவதே அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச்சர்

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரானின் ராணுவ, அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குத... மேலும் பார்க்க

அமெரிக்கா முதன்முதலாகப் பயன்படுத்திய பங்கர் பஸ்டர்! பெயரிலேயே பயம் காட்டும் குண்டுகள்!

ஈரானில் உள்ள அணு ஆயுத உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது உலகளவில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்தியிருக்கும் பங்கர் பஸ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமெனி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்... மேலும் பார்க்க

சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 22 பேர் பலி

டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் பிரார்த்தனை செய்துகொண... மேலும் பார்க்க

அமெரிக்க தாக்குதல்: ஈரானுக்கு இருக்கும் வழிகள்!

ஈரான் கடந்த பல்லாண்டுகளாக உள்நாட்டிலும், பிராந்தியம் முழுவதும் பல அடுக்கு ராணுவத் தளங்களை கட்டமைத்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை இவை தடுத்து வந்தன. இந்நிலையில், இஸ்ரேலுடனான ஈரான... மேலும் பார்க்க

ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின... மேலும் பார்க்க