செய்திகள் :

சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 22 பேர் பலி

post image

டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 22 பேர் பலியானார்கள். 63 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

ஆனால் சிரிய உள்துறை அமைச்சகம், ஐ.எஸ்.ஐ.எல் குழுவைச் சேர்ந்தவர் தேவாலயத்திற்குள் நுழைந்து அங்குள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விவசாயிகளுக்கு இனிக்காத மாங்கனி! 10 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடி பரப்பு குறையும்?

அமெரிக்கா முதன்முதலாகப் பயன்படுத்திய பங்கர் பஸ்டர்! பெயரிலேயே பயம் காட்டும் குண்டுகள்!

ஈரானில் உள்ள அணு ஆயுத உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது உலகளவில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்தியிருக்கும் பங்கர் பஸ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது: ஈரான் தலைவர் கமெனி

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது என்று அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்... மேலும் பார்க்க

அமெரிக்க தாக்குதல்: ஈரானுக்கு இருக்கும் வழிகள்!

ஈரான் கடந்த பல்லாண்டுகளாக உள்நாட்டிலும், பிராந்தியம் முழுவதும் பல அடுக்கு ராணுவத் தளங்களை கட்டமைத்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை இவை தடுத்து வந்தன. இந்நிலையில், இஸ்ரேலுடனான ஈரான... மேலும் பார்க்க

ஈரான் மீது தாக்குதல்: டிரம்ப் தெளிவாக பதிலளிக்க ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது நடத்திய தாக்குதல் தொடா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெளிவான பதில்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின... மேலும் பார்க்க

கடல் வழித்தடத்தை மூட ஈரான் ஒப்புதல்? கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!

ஈரான் நாடாளுமன்றத்தில் ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை மூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கடல் வழியான ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸை மூடிவிட்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில்... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க