செய்திகள் :

கடல் வழித்தடத்தை மூட ஈரான் ஒப்புதல்? கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்!

post image

ஈரான் நாடாளுமன்றத்தில் ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை மூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய கடல் வழியான ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸை மூடிவிட்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது.

ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழியாக உலக நாடுகளுக்குத் தேவையான 5-ல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

(வடக்கு) ஈரான் - ஓமன் - ஐக்கிய அரபு அமீரகம் (தெற்கு) ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் கடல் வழித்தடம் அமைந்துள்ளது. இது 30 கி.மீ. நீளமுடையது.

பாரசீக வளைகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றையும் இணைக்கும் வகையில் உள்ளதால், இதன் வழியே உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 20% கொண்டுசெல்லப்படுகிறது.

இந்த வழித்தடத்தை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை ஈரான் மூடுவதை ஊக்குவிக்கக் கூடாது என சீனாவிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ இன்று கேட்டுக்கொண்டார்.

இதனை ஈரான் செய்தால், அது பொருளாதார தற்கொலைக்குச் சமம் என்றும், ஈரான் செய்யும் மிகப்பெரிய தவறு எனவும் குறிப்பிட்டார்.

ஈரானின் இத்தகைய நடவடிக்கை அமெரிக்க பொருளாதாரத்தை விட மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்பதால், அமெரிக்கா இதில் அக்கறையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை மூட ஈரான் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஈரான் - இஸ்ரேல் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. அணுசக்தி உற்பத்தியை ஈரான் கைவிட வேண்டும் என இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே சனிக்கிழமை இரவு அதிசக்திவாய்ந்த குண்டுகளை பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் மூலம் ஈரானில் வீசியது அமெரிக்கா. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அணுசக்தி உற்பத்தி தளவாடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலையிட்டுள்ளதால், அமெரிக்கா தொடங்கி வைத்த போரை ஈரான் முடித்துவைக்குமென ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இதையும் படிக்க | மிட்நைட் ஹேமர்: ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா தாக்குதல்!

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!

ஈரானிலிருந்து மேலும் 311 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து 1,428 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

மிட்நைட் ஹேமர்: ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா தாக்குதல்!

ஆபரேஷன் சிந்தூர் பாணியில் ஈரானில் அமெரிக்கா நள்ளிரவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பெண்டகன்... மேலும் பார்க்க

சர்வதேச விதிகளை மீறியது அமெரிக்கா: சீனா கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலின் மூலம் சர்வதேச விதிகளை அமெரிக்கா மீறியுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனத்திற்குரியது என்றும், இரு தரப்பினரும் உடன... மேலும் பார்க்க

மேற்கு ஈரானில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

ஈரானின் மேற்கு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.இன்று காலை இஸ்ரேலை நோக்கி ஈரான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன... மேலும் பார்க்க

ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார் ஈரான் வெளியுறவு அமைச்சர்

ரஷிய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷியா செல்லவுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், திங்கள்கிழமை மாஸ்கோவிற்கு செல்லவிருப்பதாக ... மேலும் பார்க்க

இஸ்ரேல், செளதி பங்குச் சந்தை உயர்வு! ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமா?

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல், செளதி அரேபியாவின் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. இஸ்ரேலின் பங்குச் சந்தை குறியீடான டிஏ -35, 1.2% வரையிலும், செளதி அரேபியாவின் பங்குச் சந்தை... மேலும் பார்க்க