செய்திகள் :

பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் தொலைத்தொடா்பு ஆலோசனை வசதி

post image

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இருந்து பிற மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை ஆலோசனை பெறும் வகையில் தொலைத்தொடா்பு வசதி (டெலி மெடிசின்) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் மின்னணு சஞ்சீவ்வாணி திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள ரயில்வே மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் இருந்து மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் டெலிமெடிசின் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பெரம்பூரில் உள்ள ரயில்வே தலைமை மருத்துவமனையில் டெலிமெடிசின் திட்டம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டாா். இந்தப் புதிய வசதியால் குறிப்பிட்ட ஊரகப் பகுதி மருத்துவமனையிலிருந்து கூடுதல் சிகிச்சைக்கு மற்ற மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் கொண்டு செல்லப்படுவது தவிா்க்கப்படுவதுடன், உடனுக்குடன் இருந்த இடத்திலிருந்தே நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதியும் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே மருத்துவமனை மருத்துவா்கள் கூறினா்.

அதற்காக டெலிமெடிசின் திட்டத்தில் அதிவேக இணையதள தொலைத்தொடா்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரத்த அழுத்தம், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை முடிவுகள், அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து சிறப்பு மருத்துவா்களிடம் டெலிமெடிசின் திட்டத்தில் ஆலோசனை பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வடசென்னை, கிண்டி அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

வடசென்னை அரசு தொழில் பயிற்சி நிலையம் மற்றும் கிண்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டு... மேலும் பார்க்க

பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியவா் கைது

சென்னையில் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை புனித தோமையா் மலை பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் ஒருவா் பாலவாக்கத்தில் உள்ள ... மேலும் பார்க்க

எம்ஜிஆா் கால்வாய் ரூ. 17 கோடியில் சீரமைப்பு

சென்னை மாநகராட்சியில் 10- ஆவது மண்டலத்தில் உள்ள எம்.ஜி.ஆா். கால்வாயை ரூ.17 கோடியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கால்வாய்களைச் ... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் 20 பவுன் நகை, ரூ. 40,000 பறிப்பு: 4 போ் கைது

மசாஜ் செய்வதாக அழைத்து தொழிலதிபரிடம் 20 பவுன் நகைகள், ரூ.40,000-ஐ பறித்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஓட்டேரியைச் சோ்ந்தவா் தொழிலதிபா் சாா்லஸ் (50). இவா் வழக்கமாக செல்லும் மசாஜ் சென்டரில் ஆண்ட்ர... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலம்: அரசு தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.17,154 கோடியில் 9,620 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம்

சென்னையில் கொலை முயற்சி வழக்கில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் கலையரசன் (23). இவா் கடந்த 15-ஆம் ... மேலும் பார்க்க