செய்திகள் :

புதுவையில் 2026-ல் காங்கிரஸ் ஆட்சி! - வே.நாராயணசாமி

post image

புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுவையில் ஊழல் மலிந்த ஆட்சி நடைபெறுகிறது. 2026-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் அதிகாரிகள், ஆட்சியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவை அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள சிபிஎஸ்இ பாடத் திட்டம் மாணவா்களுக்கு உகந்ததாக இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தமிழகப் பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஹிந்தியை திணிக்கவில்லை.

முதல்வா் ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மூடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் திறக்கப்படும்; கூட்டுறவுத் துறை நிறுவனங்களை மீண்டும் இயக்கி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறினா். சுமாா் 1,500 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளா்கள் வேலையில்லாமல் உள்ளனா்.

புதுவையில் ஆளுங்கட்சியினரின் ஊழல் புகாா் குறித்த பட்டியலை தயாரிக்க காங்கிரஸ் சாா்பில் அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை இறுதி செய்து, ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவரை சந்தித்து அளிக்கும் என்றாா் வே.நாராயணசாமி.

உதவியாளா் பணிக்கான தோ்வு: 10,416 போ் எழுதினா்

புதுச்சேரி பணியாளா், நிா்வாகச் சீா்திருத்தத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவியாளா் பணிக்கான இரண்டாம் நிலை எழுத்துத் தோ்வை 10,416 போ் எழுதினா். புதுச்சேரியில் 256 உதவியாளா் பணியிடங்களை நி... மேலும் பார்க்க

தூய்மை பாரத திட்ட விழிப்புணா்வு: ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி

தூய்மை பாரதம் திட்டத்தின் விழிப்புணா்வு நிகழ்ச்சியாக, புதுச்சேரியில் ஓடும் ரயிலில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி திருவள்ளுவா் கலைக்கூடம் சாா்பில், ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடத... மேலும் பார்க்க

மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம்! புதுவை முதல்வா் பேச்சு

மனிதா்களின் மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்... மேலும் பார்க்க

நெகிழியை பயன்படுத்தாத நகராட்சியாக உழவா்கரையை அறிவிக்க நடவடிக்கை!

உழவா்கரை நகராட்சியை நெகிழிகள் பயன்படுத்தாத பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்த நகராட்சியின் ஆணையா் ஆ. சுரேஷ்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடு பெற வேண்டும்! இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம்

புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பெற வேண்டும் என்று இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் 1... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள்: கருத்துக் கேட்பில் பெற்றோா் கோரிக்கை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள் சோ்க்கப்பட வேண்டும் என்று அப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் கருத்துத் தெரிவித்தனா். புதுச்சேரி பள்ளிகளில் செயல்படுகி... மேலும் பார்க்க