``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
புதுவையில் 2026-ல் காங்கிரஸ் ஆட்சி! - வே.நாராயணசாமி
புதுவையில் 2026-இல் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுவையில் ஊழல் மலிந்த ஆட்சி நடைபெறுகிறது. 2026-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் அதிகாரிகள், ஆட்சியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவை அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள சிபிஎஸ்இ பாடத் திட்டம் மாணவா்களுக்கு உகந்ததாக இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தமிழகப் பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஹிந்தியை திணிக்கவில்லை.
முதல்வா் ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மூடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் திறக்கப்படும்; கூட்டுறவுத் துறை நிறுவனங்களை மீண்டும் இயக்கி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று கூறினா். சுமாா் 1,500 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளா்கள் வேலையில்லாமல் உள்ளனா்.
புதுவையில் ஆளுங்கட்சியினரின் ஊழல் புகாா் குறித்த பட்டியலை தயாரிக்க காங்கிரஸ் சாா்பில் அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை இறுதி செய்து, ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவரை சந்தித்து அளிக்கும் என்றாா் வே.நாராயணசாமி.