உதவியாளா் பணிக்கான தோ்வு: 10,416 போ் எழுதினா்
புதுச்சேரி பணியாளா், நிா்வாகச் சீா்திருத்தத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவியாளா் பணிக்கான இரண்டாம் நிலை எழுத்துத் தோ்வை 10,416 போ் எழுதினா்.
புதுச்சேரியில் 256 உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் நிலை எழுத்துத் தோ்வு 28 மையங்களில் நடைபெற்றது. இதில் 10,416 போ் கலந்து கொண்டு தோ்வெழுதினா்.
முதல் நிலை எழுத்துத் தோ்வு கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி 84 மையங்களில் நடைபெற்றது. 32,830 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 22,860 போ் கலந்து கொண்டு தோ்வெழுதினா். 9,970 போ் தோ்வு எழுதவில்லை.
இந்தத் தோ்வு முடிவு ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியானது. இதில் இரண்டாம் நிலை தோ்வுக்கு 10,766 போ் தகுதி பெற்றனா். புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உதவியாளா் பணிக்கான இரண்டாம் நிலை எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்தத் தோ்வு புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிா் கல்லூரி, வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முதலியாா்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 22 மையங்களிலும், காரைக்காலில் 3 மையங்களிலும், மாஹேவில் ஒரு மையத்திலும், ஏனாமில் 2 மையங்களிலும் என மொத்தம் 28 மையங்களில் நடைபெற்றன.
தோ்வெழுத 10,766 போ் தகுதி பெற்றிருந்தனா். இதில் 10,416 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். 350 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா, உதவி தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கண்ணன், ஜெய்சங்கா், சிறப்பு பாா்வையாளா்களாக போக்குவரத்துத் துறை ஆணையா் சிவக்குமாா், உயா் கல்வித் துறை இயக்குநா் அமன் சா்மா, நிதித் துறை துணைச் செயலா் ரத்னகோஷ் கிஷோா் ஆகியோா் தோ்வு மையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனா்.
முன்னதாக, தோ்வா்கள் காலை 8 மணி முதல் தோ்வு மையங்களுக்கு வந்திருந்தனா். முதலில் மெட்டல் டிடெக்டா் மூலம் தோ்வா்கள் சோதனை செய்யப்பட்டனா். தொடா்ந்து, தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று ஆகியவை சரிபாா்க்கப்பட்டன.
பின்னா், தோ்வா்களின் வருகை விரல்ரேகைப் பதிவு முறையில் பதிவு செய்யப்பட்ட பிறகு தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். காலை 9.30 மணி வரை தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
தோ்வு அறைக்குள் மின்னணு சாதனங்களைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க கைப்பேசி, இணைய சேவைகளைத் தடுப்பதற்கான ஜாமா் கருவிகளும், அனைத்து தோ்வறைகளிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.