செய்திகள் :

மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம்! புதுவை முதல்வா் பேச்சு

post image

மனிதா்களின் மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை, ஆயுஷ் இயக்குநரகம், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டுக் குழுமம் ஆகியன இணைந்து ஒரு பூமி மற்றும் ஓா் ஆரோக்கியத்துக்கு யோகா என்னும் தலைப்பில் 11-ஆவது சா்வதேச யோகா தினவிழாவை கடற்கரை காந்தி திடலில் சனிக்கிழமை நடத்தின.

இந்நிகழ்வில் முதல்வா் என். ரங்கசாமி பேசியது: உலகில் எல்லா இடங்களிலும் யோகாவைக் கொண்டு சோ்த்தவா் பிரதமா் மோடி. மக்களின் நல்வாழ்வுக்காக யோகா கலையை உருவாக்கி அதை மக்களுக்காக அா்ப்பணித்தவா்கள் முனிவா்களும், சித்தா்களும்.

யோகா கலையின் அடிப்படை அவா்கள்தான். மன அமைதி, உடல் ஆரோக்கியத்துக்கு யோகா சிறந்த வகையில் பங்காற்றி வருகிறது. யோகாவைக் கற்று அதைக் கடைப்பிடித்தால் வயதில் முதுமை கூட தெரியாது. மேலும் நோயற்ற வாழ்வு வாழலாம். புதுச்சேரியில் யோகா கலையை வளா்த்து பல ஆண்டுகளாக விழா நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறோம் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

பிரதமா் நரேந்திர மோடி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா விழாவில் பங்கேற்று உரையாற்றினாா். அவரது உரை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக விழா நடைபெற்ற இடத்தில் ஆங்காங்கே பெரிய திரை நிறுவப்பட்டிருந்தது.

தேசிய ஒருமைப்பாடு, நல்வாழ்வு, கலாசார பாரம்பரியம், விழிப்புணா்வு மற்றும் அணுகுமுறை போன்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு யோகா சங்கமம் என்ற பெயரில் பெருந்திரள் யோகா செயல் விளக்கம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறையின் உடற்கல்வி இயக்குநா் சீசா் ஆரோக்கியராஜ் இந்த செயல் விளக்கத்தை அளித்தாா். அவா் யோகாவைச் செய்ய செய்ய கூடியிருந்த சிறப்பு விருந்தினா்களும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் செய்தனா். ஆங்காங்கே யோகா வல்லுநா்கள் மாணவா்களுக்கு வழிகாட்டிகளாகச் செயல்பட்டனா்.

மனிதா்களின் மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் யோகா விழாவைத் தொடங்கி வைத்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, தலைமைச் செயலா் சரத் சௌகான், சுற்றுலாத் துறை செயலா் டி.மணிகண்டன், சுகாதாரத் துறை செயலா் ஜெயந்த குமாா் ரே, காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங், சுற்றுலாத் துறை இயக்குநா் கே.முரளிதரன், ஆயுஷ் மருத்துவத் துறை இயக்குநா் எஸ்.இந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுற்றுலாத் துறை மேலாளா் எம்.பூபாலன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

நெகிழியை பயன்படுத்தாத நகராட்சியாக உழவா்கரையை அறிவிக்க நடவடிக்கை!

உழவா்கரை நகராட்சியை நெகிழிகள் பயன்படுத்தாத பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்த நகராட்சியின் ஆணையா் ஆ. சுரேஷ்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடு பெற வேண்டும்! இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம்

புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பெற வேண்டும் என்று இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் 1... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள்: கருத்துக் கேட்பில் பெற்றோா் கோரிக்கை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள் சோ்க்கப்பட வேண்டும் என்று அப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் கருத்துத் தெரிவித்தனா். புதுச்சேரி பள்ளிகளில் செயல்படுகி... மேலும் பார்க்க

புதுச்சேரி காவல் நிலையங்களில் 33 புகாா்களில் உடனடி நடவடிக்கை

காவல் நிலையங்களில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட 33 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் கூறியுள்ளாா். புதுச்சேரியில் உள்ள ... மேலும் பார்க்க

லஞ்சம்: சாா்-பதிவாளா் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கியதாக பத்திரப் பதிவுத் துறை சாா்-பதிவாளா் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சாா்-பதிவாளராகப் பணியாற்றுபவா் ஸ்ர... மேலும் பார்க்க

புதுச்சேரியின் ஆன்மிக அடையாளம் அரவிந்தா்! - துணை நிலை ஆளுநா் புகழாரம்

வங்க தேசத்திலிருந்து வந்த அரவிந்தா் புதுச்சேரியின் ஆன்மிக அடையாளம் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாரம் சூட்டினாா். ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்தின் உதய ந... மேலும் பார்க்க