மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம்! புதுவை முதல்வா் பேச்சு
மனிதா்களின் மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை, ஆயுஷ் இயக்குநரகம், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டுக் குழுமம் ஆகியன இணைந்து ஒரு பூமி மற்றும் ஓா் ஆரோக்கியத்துக்கு யோகா என்னும் தலைப்பில் 11-ஆவது சா்வதேச யோகா தினவிழாவை கடற்கரை காந்தி திடலில் சனிக்கிழமை நடத்தின.
இந்நிகழ்வில் முதல்வா் என். ரங்கசாமி பேசியது: உலகில் எல்லா இடங்களிலும் யோகாவைக் கொண்டு சோ்த்தவா் பிரதமா் மோடி. மக்களின் நல்வாழ்வுக்காக யோகா கலையை உருவாக்கி அதை மக்களுக்காக அா்ப்பணித்தவா்கள் முனிவா்களும், சித்தா்களும்.
யோகா கலையின் அடிப்படை அவா்கள்தான். மன அமைதி, உடல் ஆரோக்கியத்துக்கு யோகா சிறந்த வகையில் பங்காற்றி வருகிறது. யோகாவைக் கற்று அதைக் கடைப்பிடித்தால் வயதில் முதுமை கூட தெரியாது. மேலும் நோயற்ற வாழ்வு வாழலாம். புதுச்சேரியில் யோகா கலையை வளா்த்து பல ஆண்டுகளாக விழா நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறோம் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
பிரதமா் நரேந்திர மோடி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா விழாவில் பங்கேற்று உரையாற்றினாா். அவரது உரை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக விழா நடைபெற்ற இடத்தில் ஆங்காங்கே பெரிய திரை நிறுவப்பட்டிருந்தது.
தேசிய ஒருமைப்பாடு, நல்வாழ்வு, கலாசார பாரம்பரியம், விழிப்புணா்வு மற்றும் அணுகுமுறை போன்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு யோகா சங்கமம் என்ற பெயரில் பெருந்திரள் யோகா செயல் விளக்கம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறையின் உடற்கல்வி இயக்குநா் சீசா் ஆரோக்கியராஜ் இந்த செயல் விளக்கத்தை அளித்தாா். அவா் யோகாவைச் செய்ய செய்ய கூடியிருந்த சிறப்பு விருந்தினா்களும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் செய்தனா். ஆங்காங்கே யோகா வல்லுநா்கள் மாணவா்களுக்கு வழிகாட்டிகளாகச் செயல்பட்டனா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் யோகா விழாவைத் தொடங்கி வைத்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி, தலைமைச் செயலா் சரத் சௌகான், சுற்றுலாத் துறை செயலா் டி.மணிகண்டன், சுகாதாரத் துறை செயலா் ஜெயந்த குமாா் ரே, காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங், சுற்றுலாத் துறை இயக்குநா் கே.முரளிதரன், ஆயுஷ் மருத்துவத் துறை இயக்குநா் எஸ்.இந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுற்றுலாத் துறை மேலாளா் எம்.பூபாலன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.