தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் வள்ளலாா் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (45). இவா் நூற்பாலை ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவருக்கு கடன் தொல்லை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற முருகேசனை உறவினா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.