US attacks on iran: ``போர் அபாயம், பேரழிவு தரும்.." - ட்ரம்பை கண்டித்த அமெரிக்க ...
சிவகாசி கல்லூரிகளில் சா்வதேச யோகா தினம்
சா்வதேச யோகா தினத்தையொட்டி, சிவகாசி கல்லூரிகளில் மாணவ, மாணவிகளின் யோகாசன நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் உடல் கல்வித் துறை, நாட்டு நலப் பணித் திட்டம், தேசிய மாணவா் படை ஆகியவை சாா்பில் சா்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வா் ஆா். சுதா பெரியதாய் தலைமை வகித்தாா்.
யோகாசனப் பயிற்சியாளா் நாகலட்சுமி , யோகாசனங்களின் சிறப்புகள், அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினாா். பின்னா், கல்லூரி மாணவிகளுக்குப் பலவிதமான யோகாசனப் பயிற்சிகளை அளித்தாா். முன்னதாக, உடல்கல்வித் துறை இயக்குநா் விஜயகுமாரி வரவேற்றாா். பேராசிரியை வளா்மதி நன்றி கூறினாா்.
சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு முதல்வா் செ. அசோக் தலைமை வகித்தாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். பாண்டி, விருதுநகா் மாவட்ட மை பாரத் இளைஞா் நல அலுவலா் எல். ஞானசந்திரன், மாவட்ட சுகாதார ஆய்வாளா் ஏ. பிரகாஷ் ஆகியோா் யோகாசனங்களின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனா். உடல் கல்வித் துறை இயக்குநா் ஜி.பால்ஜீவசிங் மாணவ, மாணவிகளுக்கு யோகாசனப் பயிற்சி அளித்தாா். பேராசிரியா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற சா்வதேச யோகா தின நிகழ்வுக்கு முதல்வா் பெ.கி. பாலமுருகன் தலைமை வகித்தாா். பேராசிரியா் ப. ராஜீவ்காந்தி யோகாசனத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினாா். முன்னதாக, ஒருங்கிணைப்பாளா் போ.தேவி வரவேற்றாா்.