Beauty: வீட்டிலேயே பார்லர்; செலவே இல்லாத உருளைக்கிழங்கு ஃபேஷியல்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த உருளைக்கிழங்கில் எக்கச்சக்க அழகுக் குறிப்புகளும் இருக்கின்றன என்கிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசந்த்ரா.

வெயிலில் சென்று வந்தப் பிறகு நெற்றியும், கன்னங்களும், மூக்கும் நிறம் மாறி கறுத்துப் போயிருக்கும். உருளைக்கிழங்கை அரைத்து, சாறு எடுத்து, அதை உடனே முகம் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் அலசி விட்டீர்கள் என்றால், வெயிலால் கருத்த முகத்தின் நிறம் மாறி பழைய பொலிவுக்கு வந்துவிடும்.
நேரம் காலம் பார்க்காமல் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு, அது ஆணோ அல்லது பெண்ணோ இருவருக்குமே கருவளையம் கட்டாயம் இருக்கும். இவர்கள் உருளைக்கிழங்கை அரைத்து, சாறுப் பிழிந்து, அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து மூடிக்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கில் இருக்கிற நேச்சுரல் ப்ளீச் கருவளையத்தை படிப்படியாக சரி செய்து விடும்.

கருவளையம் காரணமாக பலருக்கும் கண்கள் இடுங்கியது போல இருக்கும். உருளைக்கிழங்குச் சாறு கருவளையத்தை நீக்கிய பின்பு முகம் மட்டுமல்ல கண்களும் பிரைட்டாக பளிச்சென்று தெரியும்.
கண்களின் ஓரத்தில் சிலருக்கு கோடுகள் விழுந்திருக்கும். இது அவர்களை வயதானவர் போல காட்டும். இவர்கள் தினமும் உருளைக்கிழங்குச் சாறைத் தொட்டு அந்தக் கோடுகளின் மீது வைத்து வந்தால், மெள்ள மெள்ள அது குறைய ஆரம்பிக்கும்.

சிலருக்கு கழுத்தில் செயின் உரசி உரசி கருப்பாக இருக்கும். அவர்களும் அடிக்கடி உருளைக்கிழங்குச் சாறை அந்த இடத்தில் தடவி வந்தால் கருமை மாறும்.
உருளைக்கிழங்குச் சாறு 2 டீஸ்பூன், சம அளவு காய்ச்சாதப் பால், சில துளிகள் கிளிசரின், பாதாம் எண்ணெய் சில துளிகள், முல்தானி மட்டி போலவே இருக்கும் கயோலின் மண் (kaolin powder) சிறிதளவு... இவை ஐந்தையும் நன்கு கலந்து, வாரம் இரண்டு முறை முகத்தில் ஃபேஸ் பேக்காக போட்டு வந்தால், ஃபேஷியல் செய்ததுபோல முகம் பளிச்சென்று இருக்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...