பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
வாசிம் அக்ரமை முந்தி வரலாறு படைத்த பும்ரா!
இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா வாசிம் அக்ரமை முந்தி வரலாறு படைத்துள்ளார்.
இங்கிலாந்துடனான முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து 2-ஆம் நாள் முடிவில் 209/3 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ராதான் அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இதன்மூலம், ஆசியாவிலேயே வெளிநாடுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த நபராக மாறியுள்ளார். இதற்கு முன்பாக வாசிம் அக்ரம் அந்தச் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தார்.
வெளிநாட்டுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆசிய வீரர்கள்
1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 147 (இந்தியா)
2. வாசிம் அக்ரம் - 146 (பாகிஸ்தான்)
3. அனில் கும்ப்ளே - 141 (இந்தியா)
4. இஷாந்த் சர்மா - 130 (இந்தியா)
5. முகமது ஷமி - 123 (இந்தியா)