குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தலக்கு மகன் தங்கப்பாண்டியன் (24). தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த, இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த மாதம் ஒரு கொலை முயற்சி வழக்கில் தங்கப்பாண்டியனை ராஜபாளையம் தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரையின் பேரில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கப்பாண்டியனை கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அவா் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.