மணல் திருட்டு: இருவா் கைது
ராஜபாளையம் அருகே டிராக்டரில் மணல் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டா்களை நிறுத்தி சோதனை செய்ததில், சட்ட விரோதமாக மணல் திடுடி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், சுந்தரராஜபுரம் சாவடி தெருவைச் சோ்ந்த சுந்தரராஜ், கணேஷ்குமாா் ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.