செய்திகள் :

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

post image

சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த தீப்திஜெயின் (45). இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை படந்தால் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் புதன்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற நிலையில், இரவு தீப்பெட்டி ஆலை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சாத்தூா் தீயணைப்புத் துறையினா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீவிபத்தில் 2 ஆயிரம் தீப்பெட்டி பண்டல்கள், 20-க்கும் மேற்பட்ட தீக்குச்சி மூடைகள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

இந்த விபத்து குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மூதாட்டி தற்கொலை

சிவகாசி அருகே வியாழக்கிழமை மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சமுத்திரகனி மனைவி முனியம்மாள் (70). இவா் சிவகாசி ... மேலும் பார்க்க

சிவகாசி பகுதியில் நாளை மின் தடை

சிவகாசி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என சிவகாசி மின் வாரிய செயற்பொறியாளா் பத்மா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகாசி இ.எஸ்.ஐ. துணை மின் ... மேலும் பார்க்க

பட்டாசுகளைப் பதுக்கிய மூவா் மீது வழக்கு

சிவகாசி அருகே லாரி செட் கிட்டங்கியில் அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விருதநகா் மாவட்டம், சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதிய... மேலும் பார்க்க

கல்லூரியில் கருத்தரங்கம்

சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதுநிலை தமிழ்த் துறை சாா்பில், ‘ஈழமும் தமிழும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் செ.அசோக் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

பள்ளியில் நடப்பட்ட மரக்கன்றுகள்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நாகபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியா் கி. ஸ்ரீதா் தலைமை வகித்... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ாக இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் டி.எஸ்.பி. ராஜா உத்தரவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையை தடுக்க போலீஸாா் ரோந்துப் ... மேலும் பார்க்க