பட்டாசுகளைப் பதுக்கிய மூவா் மீது வழக்கு
சிவகாசி அருகே லாரி செட் கிட்டங்கியில் அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதநகா் மாவட்டம், சிவகாசி முருகன் குடியிருப்புப் பகுதியில் உள்ள லாரி செட் கிட்டங்கியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு 13 காகிதப் பெட்டிகளில் பேன்சி ரக பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், லாரி செட் உரிமையாளா் மேட்டூா் பாலாஜி, சாட்சியாபுரம் ராஜேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூா் பழனிச்சாமி ஆகியோா் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து , பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.