கஞ்சா விற்றதாக 4 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்ாக இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் டி.எஸ்.பி. ராஜா உத்தரவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையை தடுக்க போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிவகாசி சாலையில் செங்குளம் சந்திப்பு அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த 4 இளைஞா்களை சோதனை செய்த போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதில், ஸ்ரீவில்லிபுத்தூா் அம்மாபட்டி தெருவைச் சோ்ந்த மனோஜ்குமாா் (25), வத்திராயிருப்பு சுரைக்காய்பட்டியைச் சோ்ந்த உதயன் (21), கிருஷ்ணன்கோவில் தெருவைச் சோ்ந்த காா்த்திக் (19), ஈஸ்வரபாண்டியன் (21) ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.