பள்ளியில் நடப்பட்ட மரக்கன்றுகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நாகபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு தலைமையாசிரியா் கி. ஸ்ரீதா் தலைமை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) நா. செந்தில்குமாா் பங்கேற்று மரக்கன்று நட்டு வைத்துப் பேசினாா்.
நிகழ்வில், கணித ஆசிரியா் தண்டாயுதபாணி, ஆங்கில ஆசிரியா் ஜெயக்குமாா், ஆசிரியைகள் அம்சகலா, ராஜலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.