Health: மாம்பழம் சாப்பிட்டால் கட்டி வருமா? மருத்துவர் பதில்!
தினமணி செய்தி எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூா் கோபுரத்தில் மீண்டும் எரிந்த மின் விளக்குகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் ராஜகோபுரத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எரியாமல் இருந்த மின் விளக்கு, தினமணி செய்தி எதிரொலியாக வெள்ளிக்கிழமை மீண்டும் எரியத் தொடங்கின.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வடபத்ரசயனா் சந்நிதி ராஜகோபுரம் 11 நிலைகளுடன் 196 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் தமிழக அரசின் முத்திரையாக உள்ளது. கோபுரத்தில் உள்ள 11 நிலைகள், கோபுரத்தின் உச்சியில் கலசத்தின் மேலே மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, எரியாததால், கோபுரம் இருளில் மூழ்கியிருந்தது.
இதுகுறித்து கடந்த வாரம் தினமணி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கோபுரத்தில் மின் விளக்குகள் சரி செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை முதல் எரியத் தொடங்கின. இதனால், பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.