செய்திகள் :

உலகத்தை இணைத்துள்ளது யோகா: பிரதமர் மோடி

post image

விசாகப்பட்டினம்: யோகா முழு உலகத்தை இணைத்துள்ளது. யோகா உலகத்துடன் ஒற்றுமையை நோக்கி மக்களை வழிநடத்துகிறது, அதே நேரத்தில் சர்வதேச யோகா நாள் உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும் மனிதகுலத்திற்கான பண்டைய நடைமுறையின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.

ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா நாள் கடைபிடிக்கப்படும் என்று கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ஐ.நா. அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் யோகா நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 11 ஆவது சர்வதேச யோகா நாள், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா’ என்ற கருப்பொருளுடன் சனிக்கிழமை (ஜூன் 21) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.

ஆந்திரம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் ஆா்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் வரை 26 கி.மீ. தொலைவிலான சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற 11 ஆவது சர்வதேச யோகா நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, 11 ஆவது யோக நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி, யோகா முழு உலகத்தையும் இணைத்துள்ளது. ஜூன் 21 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா நாளாகக் கொண்டாட இந்தியா முன்மொழிந்தபோது, ​​குறுகிய காலத்தில் 175 நாடுகள் அதை ஏற்றுக்கொண்டன.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, யோகா இப்போது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. யோகா வாழ்க்கையின் ஒரு கலை. அது நம்மை எல்லோரையும் இணைக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

சிட்னி ஓபரா ஹவுஸ் அல்லது எவரெஸ்ட் மலை அல்லது கடலின் பரப்பளவு உள்பட யோகா அனைவருக்குமானது என்பதுதான் செய்தி.

உலகம் முழுவதும் சில பதட்டங்கள் அல்லது பிற நிகழ்வுகள் நடந்து வருவதாக கூறிய மோடி,

"இந்த யோகா நாள் மனிதகுலத்திற்கான யோகாவின் தொடக்கத்தைக் குறிக்கட்டும். உள் அமைதி உலகளாவிய கொள்கையாக மாறும்" என்று உலகிற்கு தனது வேண்டுகோளாக கூறினார்.

மேலும், யோகா முழு உலகத்தையும் இணைத்து ஒற்றுமையை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. யோகா நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் அடைவதற்கு ஒரு நாகரீகம். யோகா என்பது எல்லைகள், பின்னணிகள், வயது அல்லது திறன்களுக்கு அப்பாற்பட்ட அனைவருக்கும் ஏற்றது.

யோகா என்பது ஒரு சிறந்த தனிப்பட்ட ஒழுக்கம், மக்களை "நான் என்பதிலிருந்து நாம்" என்று சொல்வதற்கு அழைத்துச் செல்லும் ஒரு அமைப்பு, மேலும் மனிதகுலம் மீண்டும் முழுமையடைய சுவாசிக்க, சமநிலைப்படுத்த தேவையான இடைநிறுத்த பொத்தான் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் உரையாற்றிய பின்னர், ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு பேசுகையில், மோடி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் யோகாவை பிரபலப்படுத்தி, அதை உலகளாவிய நல்வாழ்வு இயக்கமாக மாற்றியுள்ளார்.

யோகா நாள் 175-க்கும் மேற்பட்ட நாடுகளில், 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில், 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் கொண்டாடப்படுகிறது.

"இந்தியாவில் மட்டுமல்ல (உலகம் முழுவதும்) யோகாவைப் பிரபலப்படுத்தியதற்காக நமது தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் சர்வதேச யோகா நாளை தொடங்கி, யோகாவை உலகளாவிய நல்வாழ்வு இயக்கமாக மாற்றியவர் மோடி" என்று நாயுடு கூறினார்.

சனிக்கிழமை காலை நடைபெற்ற யோக பயிற்சி நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய ஆயுள் துறை மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் யோக குருக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் 3 லட்சம் போ் பங்கேற்று, ஒரே நேரத்தில் யோக பயிற்சிகளை மேற்கொண்டனர்.

ஏா் இந்தியா பயணச்சீட்டு முன்பதிவு 20% சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கா்நாடக மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுத... மேலும் பார்க்க

விருதுநகரில் கொடூர கொலை: 3 பேர் வெட்டிக் கொலை

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொலை செய்த கணவர் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவ... மேலும் பார்க்க

தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்துச் சென்ற சிறுத்தை: தேடும் பணி தீவிரம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே சிறுத்தை இழுத்துச் சென்ற நான்கு வயது சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை அருகே உ... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கபினி மற்றும... மேலும் பார்க்க

முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை!

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு பாஸ் தேவை என்ற நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று ரத்து செய்துள்ளது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நாளை மறுநாள் (... மேலும் பார்க்க