செய்திகள் :

ஆபரேஷன் சிந்து: ஈரானிலிருந்து தாயகம் திரும்பிய 517 இந்தியர்கள்!

post image

ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் மூலம், ஈரானிலிருந்து சுமார் 517 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளும் இடையில் போர் துவங்கியுள்ள நிலையில், அந்நாடுகளிலுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக, மத்திய அரசு ஆபரேஷன் சிந்து எனும் மீட்புத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், ஈரான் சென்று கல்வி பயின்ற மாணவர்கள், அந்நாட்டில் வசித்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஏராளமான இந்தியர்கள் நேற்று (ஜூன் 20) இரவு மற்றும் இன்று (ஜூன் 21) காலை, வரை இயக்கப்பட்ட விமானங்கள் மூலம் தில்லி வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:

“சிறப்பு விமானங்கள் மூலம் ஈரானிலிருந்த இந்தியர்கள் மீட்கப்பட்டு ஜூன் 20 ஆம் தேதி, இரவு 11.30 மணியளவில், புது தில்லி வந்தடைந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு பதிவில், துர்க்மெனிஸ்தான் நாட்டிலிருந்து இயக்கப்பட்ட மற்றொரு சிறப்பு விமானம் மூலமாக ஈரானிலிருந்து இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டதாகவும்; இதன்மூலம், தற்போது வரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும், அவர் அறிவித்துள்ளார்.

இத்துடன், இந்தியர்களை அழைத்து வருவதற்கு உதவிய ஈரான் அரசுக்கு. இந்திய அரசு நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானிலிருந்து இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வருவதற்காக மட்டும், அந்நாடு தனது வான்வழியைத் திறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உலகத்தை இணைத்துள்ளது யோகா: பிரதமர் மோடி

பிகாரில் பிரதமரின் பேரணிகளுக்கு ரூ.20,000 கோடி செலவு: தேஜஸ்வி குற்றச்சாட்டு!

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பேரணிகளுக்கு இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, 2014 முதல... மேலும் பார்க்க

ரூ.80க்கு ஜியோ அறிமுகம் செய்த சூப்பர் ரீசார்ஜ் பிளான்! ஆனால்?

11 மாதங்களுக்கு ரூ.895 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. டேட்டா அதிகம் தேவையில்லை. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றால், ஜியோ அற... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

ஜார்க்கண்டில் பெய்து வரும் கனமழையால், ஒடிசா மாநிலத்திலுள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஒடிசாவின் சுப... மேலும் பார்க்க

இந்தியாவில் 295 பெட்டிகள், 6 என்ஜின்களுடன் இயக்கப்படும் மிக நீண்ட ரயில்! உண்மையா?

295 பெட்டிகளுடனும், 6 என்ஜின்களுடனும் இந்திய ரயில்வே ஒரு ரயிலை இயக்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே மிக நீண்ட ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பிடித்திருக்கிறது. இதன் பெயர் சூப்பர் வாசுகி.... மேலும் பார்க்க

தீர்வு காண்பதில் அல்ல, வெற்று முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார் மோடி: ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளாரே தவிர தீர்வு காண்பதில் அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் நிலச்சரிவால் ரயில் சேவைகள் பாதிப்பு!

கர்நாடக மாநிலத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், முக்கிய ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தக்‌ஷிணா கன்னடா மாவட்டத்தின், எடக்குமாரி மற்றும் ஷிரிபகிலு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையி... மேலும் பார்க்க