செய்திகள் :

கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?

post image

ஒடிஸாவில் கலப்புத் திருமணம் செய்த பெண்ணின் குடும்பத்தினர் மொட்டையடித்து, பரிகார பூஜை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒடிஸா மாநிலத்தில் ராயகடா மாவட்டத்தில் உள்ள பைகனகுடா கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பட்டியலினத்தவர் ஒருவரை காதலித்துள்ளார்.

ஆனால், வேற்றினத்தவரை தங்கள் இனப் பெண் திருமணம் செய்தல் கூடாது என்று பெண்ணின் சமுதாயத்தில் வழக்கமாக உள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை, வேற்றினத்தவரை திருமணம் செய்து கொண்டால், தெய்வத்தின் கோபத்துக்கு குடும்பத்தினர் ஆளாகி விடுவர் என்ற மூடநம்பிக்கையும் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

இருப்பினும், தனது குடும்பத்தினர், உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி, வேற்றினத்தவரை பழங்குடிப் பெண் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில்தான், வேற்றினத்தவரை திருமணம் செய்த பெண்ணால், தங்கள் சமுதாயத்தினருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கோயிலில் பரிகார பூஜையையும் நடத்தியுள்ளனர்.

அதாவது, பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுமார் 40 பேர் சேர்ந்து, பரிகார பூஜை என்ற பெயரில், கோயிலில் மொட்டையடித்துள்ளனர். அதுமட்டுமின்றி கோழிகள், ஆடுகள், பன்றிகளை பலிகொடுத்து, கிராமத்துக்கு விருந்தும் ஏற்பாடு செய்தனர்.

இந்த விவகாரம் குறித்த விடியோ, சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது! - டிரம்ப் ஆதங்கம்

பிகாரில் பிரதமரின் பேரணிகளுக்கு ரூ.20,000 கோடி செலவு: தேஜஸ்வி குற்றச்சாட்டு!

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பேரணிகளுக்கு இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது, 2014 முதல... மேலும் பார்க்க

ரூ.80க்கு ஜியோ அறிமுகம் செய்த சூப்பர் ரீசார்ஜ் பிளான்! ஆனால்?

11 மாதங்களுக்கு ரூ.895 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் புதிய திட்டத்தை ஜியோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. டேட்டா அதிகம் தேவையில்லை. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றால், ஜியோ அற... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

ஜார்க்கண்டில் பெய்து வரும் கனமழையால், ஒடிசா மாநிலத்திலுள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஒடிசாவின் சுப... மேலும் பார்க்க

இந்தியாவில் 295 பெட்டிகள், 6 என்ஜின்களுடன் இயக்கப்படும் மிக நீண்ட ரயில்! உண்மையா?

295 பெட்டிகளுடனும், 6 என்ஜின்களுடனும் இந்திய ரயில்வே ஒரு ரயிலை இயக்கி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நாட்டிலேயே மிக நீண்ட ரயில் என்ற பெருமையை இந்த ரயில் பிடித்திருக்கிறது. இதன் பெயர் சூப்பர் வாசுகி.... மேலும் பார்க்க

தீர்வு காண்பதில் அல்ல, வெற்று முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார் மோடி: ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி முழக்கங்களின் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளாரே தவிர தீர்வு காண்பதில் அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் நிலச்சரிவால் ரயில் சேவைகள் பாதிப்பு!

கர்நாடக மாநிலத்தில் ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், முக்கிய ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தக்‌ஷிணா கன்னடா மாவட்டத்தின், எடக்குமாரி மற்றும் ஷிரிபகிலு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையி... மேலும் பார்க்க