செய்திகள் :

இஸ்ரேல் - ஈரான் போர்: தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!

post image

இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு முதல்வர், இஸ்ரேல் - ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

இந்த சூழலில் ஈரான் நாட்டிலிருந்து இந்திய வெளியுறவுத் துறை மூலமாக இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கியுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

இதற்கென புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24x7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உதவி எண்கள் பின்வருமாறு:

தொலைபேசி: 011 24193300 (Land line)

கைப்பேசி எண்: 9289516712 (Mobile Number with Whatsapp)

மின்னஞ்சல் : tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com

அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசின் சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில், செயல்பட்டுவரும் 24x7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளவும், தங்கள் பகுதியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவிற்குள் - 1800 309 3793

வெளிநாடு: +91 8069009901 / 08069009901, +91 8069009900 / 08069009900 (Missed Call)

மின்னஞ்சல் - nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com ஆகியவற்றில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | அமித் ஷாவுக்கு ஆங்கிலம் பயமல்ல; ஆனால்..! - அன்பில் மகேஸ் கருத்து

அண்ணாமலையை விசாரிக்கக் கோரி மனு

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்... மேலும் பார்க்க

'ஹிட் 3' கதை விவகாரம்- நானி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

"ஹிட் 3" பட கதை விவகாரத்தில் நடிகர் நானி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கதையை திருடி "ஹிட் 3" திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த... மேலும் பார்க்க

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி(60) உடல் நலக்குறைவால் காலமானார். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை காலமானார். அவருக்கு கலைச... மேலும் பார்க்க

வள்ளுவம் போற்றுதும்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் ரூ.80 கோடியில் புனர... மேலும் பார்க்க

திமுகவில் புகைச்சல்; தமிழ்நாட்டை அமித் ஷா பார்த்துக்கொள்வார்! - நயினார் நாகேந்திரன்

திமுகவில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் பாஜக... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்!

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும... மேலும் பார்க்க