செய்திகள் :

சிரியா முன்னாள் அதிபரின் உறவினர் கைது!

post image

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் - அஸாத்தின் உறவுக்கார சகோதரர், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாத்தின் உறவினரான, வாசிம் படி அஸாத் என்பவர் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அவரை தற்போது கைது செய்துள்ளதாக, அந்நாட்டு உள் துறை அமைச்சகம் இன்று (ஜூன் 21) தெரிவித்துள்ளது. இருப்பினும், அவரை எப்போது எங்கு கைது செய்தனர் உள்ளிட்ட தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இத்துடன், சிரியா நாட்டை ஆட்சி செய்து வந்த அஸாத் குடும்பத்தைச் சேர்ந்த வாசிம் அஸாத், அவர்களது ஆட்சியை ஆதரிக்க பிரிவிணைவாத கிளர்ச்சிப்படையை உருவாக்க பகிரங்கமாக அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்நாட்டில் நடைபெற்ற போதைப் பொருள் கடத்தலில் முக்கிய நபராக இவர் செயல்பட்டதால், அமெரிக்க அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு வாசிம் அஸாத்தின் மீது தடைகளை விதித்திருந்தது.

முன்னதாக, சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில், அந்நாட்டை 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அசாத் குடும்பத்தின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:நைஜீரியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல்! 10 பேர் பலி!

நைஜீரியாவில் தற்கொலைப் படைத் தாக்குதல்! 10 பேர் பலி!

நைஜீரியாவின் வடக்கிழக்கு மாநிலத்திலுள்ள உணவகத்தில் தற்கொலைப் படை குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொர்னோ மாநிலத்தின் கொண்டூங்கா பகுதியில், நேற்று (ஜூன் 20) மாலை வெடிகு... மேலும் பார்க்க

ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மைக்கு 1,800 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 2024-ம் ஆண்டு துவங்கியது முதல் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு 1,800-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் நோய் கட்டுபாடு மற்றும் தடுப்... மேலும் பார்க்க

காஸாவில் ரியல் ஸ்குவிட் கேம்! உணவுக்காக உயிரிழக்கும் மக்கள்!

காஸாவில் உணவுக்காக குழுமும் மக்களிடமும் இரக்கம் காட்ட மறுக்கும் இஸ்ரேல் நடவடிக்கைகள், உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாத நிலையில், தீவிர த... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு - பாகிஸ்தான் அரசு பரிந்துரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போர... மேலும் பார்க்க

எனக்கு 4 அல்லது 5 முறை நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்! - டிரம்ப் ஆதங்கம்

அமைதிக்கான நோபல் பரிசை தான் 4 அல்லது 5 முறை பெற்றிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு சந்தர்ப்பங்கள... மேலும் பார்க்க

அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை நிறு... மேலும் பார்க்க