செய்திகள் :

மகளிர் உரிமைத் தொகை: குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் கிடைக்கும்!

post image

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத் தலைவி அல்லாத பெண்களுக்கும் இந்த உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மக்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் நிச்சயமாக தரலாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும். ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும் என்று அறிவித்திருந்தார்.

அதாவது, ஏற்கனவே விண்ணப்பித்து கிடைக்காத, ஆனால் தகுதி உள்ள பெண்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பவா்கள் இம்முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு குடும்பத்தின் தலைவி மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளை இருக்கும் என்றால், அவரும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்களும், தனியாக ரேஷன் அட்டை வைத்திருந்தால், இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையை விசாரிக்கக் கோரி மனு

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்... மேலும் பார்க்க

'ஹிட் 3' கதை விவகாரம்- நானி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

"ஹிட் 3" பட கதை விவகாரத்தில் நடிகர் நானி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது கதையை திருடி "ஹிட் 3" திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த... மேலும் பார்க்க

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி(60) உடல் நலக்குறைவால் காலமானார். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை காலமானார். அவருக்கு கலைச... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்: தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!

இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு மு... மேலும் பார்க்க

வள்ளுவம் போற்றுதும்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் ரூ.80 கோடியில் புனர... மேலும் பார்க்க

திமுகவில் புகைச்சல்; தமிழ்நாட்டை அமித் ஷா பார்த்துக்கொள்வார்! - நயினார் நாகேந்திரன்

திமுகவில் புகைச்சல் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் பாஜக... மேலும் பார்க்க