செய்திகள் :

கேப்டனாக முதல் டெஸ்ட்டிலேயே கில் சதம்; ஆனாலும் அபராதம் விதிக்கப்போகிறதா ICC; காரணம் என்ன?

post image

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர்.

அணியின் ஸ்கோர் 100-ஐ எட்டுவதற்குள் 42 ரன்களில் கே.எல்.ராகுலும், 0 ரன்னில் அறிமுக வீரர் சாய் சுதர்சனும் அவுட்டாக, ஜெய்ஸ்வாலும் கேப்டன் கில்லும் கைகோர்த்தனர்.

சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமும், கில் அரைசதமும் அடிக்க இந்த பார்ட்னர்ஷிப் 120+ ரன்கள் குவித்தது.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

பின்னர், 101 ரன்களில் ஜெய்ஸ்வாலும் வெளியேற, கேப்டனுடன் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் இணைந்தார்.

அதன்பிறகு, விக்கெட்டை இழக்காத இவ்விருவரும், முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் அணியின் ஸ்கோரை 359 ஆக உயர்த்தினர். அதோடு, கில் சதமும், பண்ட் அரைசதமும் கடந்தனர்.

இவ்வாறிருக்க, கேப்டனாக முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த கில் மீது ஐ.சி.சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

அதாவது, நேற்றைய இன்னிங்ஸில் கில் தனது கால்களில் கருப்பு வண்ண சாக்ஸ் அணிந்து விளையாடினார்.

டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு கருப்பு வண்ண சாக்ஸ் அணிந்து விளையாடுவது MCC (Marylebone Cricket Club) ஆடைக்கட்டுப்பாட்டு விதியை மீறும் செயலாகும்.

திருத்தப்பட்ட விதி 19.5-ன்படி டெஸ்ட் போட்டிகளில் வெள்ளை, கிரீம், வெளிர் சாம்பல் நிற சாக்ஸ் அணிய மட்டுமே வீரர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

கேப்டன் சுப்மன் கில்
கேப்டன் சுப்மன் கில்

எனவே, கில்லின் செயலுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஐ.சி.சி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இறுதி முடிவை எடுப்பார்.

இதில், கில் வேண்டுமென்றே கருப்பு வண்ண சாக்ஸ் அணிந்து வந்திருந்தார் எனில் அது முதல்நிலைக் குற்றமாகக் கருதப்பட்டு, போட்டிக் கட்டணத்தில் 10 முதல் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கக்கூடும்.

கேப்டன் சுப்மன் கில்
கேப்டன் சுப்மன் கில்

இருப்பினும், வேண்டுமென்றே கருப்பு வண்ண சாக்ஸ் அவர் அணியவில்லை, பொருத்தமான வெள்ளை நிற அல்லது அனுமதிக்கப்பட்ட நிற சாக்ஸ் தன்னிடம் இல்லாததால் கருப்பு நிற சாக்ஸ் அணிய வேண்டியதாயிற்று எனில் தண்டனை தவிர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது.

இதுவரை நடுவர் தரப்பிலிருந்து கில் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் கில் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மருத்துவ சோதனை முடிவுகளை வெளியிட்ட திருநங்கை வீராங்கனை அனயா பங்கர்; BCCI, ICC-யின் பதில் என்ன?

Pஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர், தன்னைப்போன்ற வீராங்கனைகளை மகளிர் கிரிக்கெட்டில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு பிசிசிஐ மற்றும் ஐசிசி-க்கு தனது மர... மேலும் பார்க்க

ENG vs IND: "இவையெல்லாம் கில்லின் கவனத்தைச் சிதறடிக்கலாம்" - கில்லுக்கு சச்சின் அறிவுரை

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன்20) ஹெட்டிங்லி மைதானத... மேலும் பார்க்க

ENG vs IND: `Cap no. 317 - அறிமுகமானார் சாய் சுதர்சன்' - டாஸில் கேப்டன் கில் கூறியதென்ன?

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் ப... மேலும் பார்க்க

ENG vs IND: "இப்படியும் நடக்குமா?" - பட்டோடி டிராபி பெயர் மாற்றம் குறித்து கபில் தேவ்

இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கும், அனுபவ கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கும் லீட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் இன்று டெஸ்ட் தொடர் தொடங்க... மேலும் பார்க்க

'அவரது பெயர் நீடித்து நிலைக்க என்னால் முடிந்ததை செய்கிறேன்'- பட்டோடி குடும்பத்திடம் பேசிய சச்சின்

சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரும் கௌரவம் அளிக்கும் வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு 'ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி' என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டு... மேலும் பார்க்க

ENG vs IND: இந்திய அணியின் கேப்டனாக முதல் டெஸ்ட் - போட்டிக்குமுன் கேப்டன் கில் பேசியவை!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய தசாப்தத்தின் தொடக்கமாக கேப்டன் சுப்மன் கில் தலைமையில், இங்கிலாந்து அணியை லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இன்று எதிர்கொள்கிறது இந்திய இளம் படை.கோலி, அஸ்வின், ரோஹித் ப... மேலும் பார்க்க