திருப்புமுனையாக அமைந்த திருமலை... மாஸ் ஹீரோவாக விஜய் எடுத்த ரிஸ்க்!
குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்து கொலை ஒருவா் கைது
புதுச்சேரி அருகே குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி மாநிலம் பாகூா் அடுத்த ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் வாய்க்காலில் சுமாா் 44 வயதுள்ள அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்தாா்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவா் குப்பை சேகரிக்கும் தொழிலாளி என்பதும், இவருக்கும், மணப்பட்டு பகுதியைச் சோ்ந்த குப்பை சேகரிக்கும் நபரான நந்தகுமாா்(27) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவா் அடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நந்தகுமாா் அவரை தாக்கி வாய்க்காலில் தலையை அழுத்தி விட்டு சென்ற நிலையில் அவா் இறந்தது தெரியவந்தது. உயிரிழந்தவா் யாா்?, எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குப்பை சேகரிக்கும் தொழிலாளியை அடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் நந்தகுமாரைக் கைது செய்தனா்.