செய்திகள் :

திருப்புமுனையாக அமைந்த திருமலை... மாஸ் ஹீரோவாக விஜய் எடுத்த ரிஸ்க்!

post image

நடிகர் விஜய் தொடக்கத்தில் சாக்லேட் பாயாகதான் நடித்து வந்தார். காதல் படங்கள், குடும்ப படங்கள் என இருந்தவர் முழுக்க முழுக்க ரக்கட் பாயாக (Rugged Boy) மாறியது திருமலை படத்துக்குப் பிறகுதான்.

இன்னும் குறிப்பிட்டு சொல்வதானால் 2003-இல் இருந்துதான் அவர் தாடியை வளர்க்கத் தொடங்கினார். அது மாஸ் ஹீரோவாக மாறியதற்கான அவரது மனநிலை மாற்றமாக எடுத்துக்கொள்ளலாம்.

திருமலை படத்துக்கு முன்பாக வசீகரா, பகவதி படங்களில் மெல்லியதாக தாடி வைத்திருப்பார். அதிலும் பகவதியில் பாதி படம் வரைக்கும்தான் தாடி வைத்திருப்பார். திருமலை படத்தில்தான் படம் முழுக்க தாடி வைத்திருப்பார். பிறகு, தாடியை எடுத்ததே காவலன் படத்தில்தான். அந்த அளவுக்கு கமர்ஷியல் ஹீரோவாகி விட்டார்.

1992 - 2002: பகவதி

2003: வசீகரா, திருமலை

2003 - 2025: (திருமலைக்குப் பின்) - கில்லி, மதுரை, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி, தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், லியோ.

மாஸ் ஹீரோவாகிவிட்ட பிறகு உச்ச நட்சத்திரங்கள் புதியதாக எடுக்க ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள். ரஜினி தொடக்கத்தில் எடுத்த முள்ளும் மலரும், ஜானி, ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்கள் எல்லாம் பின்னாட்களில் இல்லாமல் போய்விட்டன.

குறிப்பாக சொல்வதானால், மாஸ் ஹீரோக்கள் சண்டைக் காட்சிகள் இல்லாமல் படம் எடுப்பதே இல்லை. அது அவர்களது நடிப்பின்மேல் இருக்கும் அவநம்பிக்கையா அல்லது கதையின் மேல் இருக்கும் அவநம்பிக்கையா எனத் தெரியவில்லை!

நடிகர் விஜய் நண்பன் படத்தில் சண்டைக் காட்சிகளே இல்லாமல் நடித்து அதை உடைத்திருந்தார். விஜய்-க்கு நிகராக இருக்கும் அஜித், சண்டையே இல்லாத பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் சண்டைக் காட்சியை வலிந்து திணித்திருப்பார்கள்.

அடுத்ததாக, விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் முதல் பாதியில் ஒரு சண்டைக் காட்சிக்கூட இல்லை என்பதை யாரும் கவனிக்கவில்லை. இரண்டாம் பாதியில் திரைக்கதை சுமாராக இருந்ததால் அந்தப் படத்தில் இருந்த அப்பா- மகன் உறவு போன்ற சில நல்ல விஷயங்களை கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்றுவிட்டோம்.

நகைச்சுவை செய்வது கமர்ஷியல் நடிகருக்கு மிகப்பெரிய பலம். ரஜினி இவ்வளவு ஆண்டுகள் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதில் அவரது ஸ்டைலுக்குப் பிறகு நகைச்சுவையும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

நடனம் ஆடுதல், நகைச்சுவையாக பேசுதல், ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தல் என கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான லட்சணங்கள் விஜய்யிடம் இருக்கின்றன.

திருமலை படத்துக்குப் பிறகு, டாப் கியரில் சென்ற விஜய் மீண்டும் சாக்லேட் பாயாக மாற முடியாமல் சென்றது. அதனால்தான் என்னவோ, காவலன் திரைப்படத்துக்கு அதீத வரவேற்பு கிடைத்தது!

காவலன் படத்தில்...

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் ஃபாத்ரூமில் அழும் காட்சிகள், கத்தி படத்தில் சிறையில் அழும் காட்சிகள் அவரை சிறந்த நடிகன் என்பதற்கான சான்றுகள்!

அறிமுக இயக்குநர்கள், 2-ஆம் பட இயக்குநர்களுக்கு விஜய் அதிகமாக வாய்ப்பளித்துள்ளார். அதில் பல தோல்விப் படங்களும் சில வெற்றிப் படங்களும் கிடைத்திருக்கின்றன.

விஜய் திருமலை படத்தில் எடுத்த முடிவு போலத்தான் நமது வாழ்க்கையிலும் எடுக்கும் சில முடிவுகள் நம்மை எங்கேயோ கூட்டிச் செல்லும்.

விஜய் திருமலையில் எடுத்தது போலவே மீண்டும் சினிமாவை கைவிட்டு அரசியல் என்ற ரிஸ்கை எடுத்திருக்கிறார். அது ஏற்றமாக மாறுமா அல்லது ஏமாற்றமாக மாறுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்!

இதையும் படிக்க :எம்.ஜி.ஆர்., ரஜினி வரிசையில்... குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த விஜய்யின் ஃபார்முலா!

கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் கவனம்பெறாமல் சென்ற கண்ணுக்குள் நிலவு!

ஷோலே அல்லது பதேர் பாஞ்சாலி எது வெற்றிப் படம் என்ற கேள்விக்கு, “ஷோலேவும் வெற்றிதான், பதேர் பாஞ்சாலியும் வெற்றிதான். அதன் நோக்கங்களே அதனைத் தீர்மானிக்கிறது” என அசோகமித்திரன் கூறியதாக ஞாபகமிருக்கிறது.நடி... மேலும் பார்க்க

ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!

ஈரான் நாட்டின் அணு விஞ்ஞானி என்று கூறப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை ரோபோ மற்றும் ஏஐ மூலம் இஸ்ரேல் படுகெலை செய்த சம்பவம் தற்போது வைரலாகியிருக்கிறது.இஸ்ரேல் - ஈரான் சண்டை இன்று, நேற்று உருவானது அல்ல. பல... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஏவப்படும் செஜ்ஜில் ஏவுகணை! அவ்வளவு மோசமானதா? முழு விவரம்

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடங்கியிருக்கும் மிக பயங்கர சண்டையில், தனது மிக நீண்டத் தொலைவு இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன்படைத்த செஜ்ஜில் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்த இருப்பதை தெஹ்ரான் உறுதி செய்தி... மேலும் பார்க்க

ஈரான் மீதான இஸ்ரேஸ் தாக்குதல்: டிரம்ப்புக்கு பின்னடைவா? பெரு வெற்றியா?

‘ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் உலக அமைதிக்கான மிக முக்கிய படி. இதன் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு முடிவுக்கு வந்தது’ஈரானின் அணுசக்தி, ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகால... மேலும் பார்க்க

கலவர பூமியாகும் லாஸ் ஏஞ்சலீஸ்! அமைதி திரும்புமா?

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நகரான லாஸ் ஏஞ்சலீஸுக்கு இப்படியொரு சோதனை வரும் என இந்த மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த நகரின் பெயர் இப்படியொரு காரணத்துக்காக உச்சரிக்கப்பட வேண்டும் என்று எப்போதுமே விர... மேலும் பார்க்க

பெருந்துயரமாக மாறிய கொண்டாட்டம்!

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 5 பெண்கள் உள்பட 11 போ் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில், பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற... மேலும் பார்க்க