செய்திகள் :

ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!

post image

ஈரான் நாட்டின் அணு விஞ்ஞானி என்று கூறப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை ரோபோ மற்றும் ஏஐ மூலம் இஸ்ரேல் படுகெலை செய்த சம்பவம் தற்போது வைரலாகியிருக்கிறது.

இஸ்ரேல் - ஈரான் சண்டை இன்று, நேற்று உருவானது அல்ல. பல காலமாகவே, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பகை, மோதல், தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், கடந்த 2020ல், ஈரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை ஏஐ மற்றும் ரோபோடிக் கருவிகளைக் கொண்டு கொலை செய்த இஸ்ரேலின் சதி திட்டம் இப்போதும் பேசப்பட்டு வருகிறது.

ஈரான் அணு விஞ்ஞானி என்றும், அந்நாட்டின் அணு குண்டு தயாரிக்கும் 'அமைத்' திட்டத்தின் மூளை என்றும் இஸ்ரேல் நம்பி வந்தது மொஹ்சென் ஃபக்ரிசாதேவைத்தான். ஆனால், அவர் யார், எப்படி இருப்பார் என்று கூட வெளியுலகுக்குத் தெரியாமல் பாதுகாத்து வந்தது ஈரான். அப்படி ஒருவர் இருக்கிறார் என்று கூட இஸ்ரேலால் ஆதாரங்களைக் காட்ட முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது.

ஆனால், இஸ்ரேல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர் ஒருவரை மட்டுமே இலக்காக நிர்ணயித்து செயல்பட்டது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் இலக்காகவும் அவர் இருந்தார்.

அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் திரட்டப்பட்டன. அவரைக் கொல்ல ஒரு தேதியும் குறிக்கப்பட்டது. அதுதான் 2020 நவம்பர் 27ஆம் தேதி. இது திட்டமிட்டபடி நடக்கும் என்று இஸ்ரேல் நம்பியிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் உலகமே இப்படியொரு தாக்குதல் சாத்தியம் என்று அதற்கு முன்பு சொல்லியிருந்தால் நம்பியிருக்காது. இப்போது நம்புகிறது.

சம்பவம் இதுதான்!

அப்சார்ட் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மொஹ்சென் ஃபக்ரிசாதே, தனது மனைவியுடன் காரில் செல்கிறார்கள். அவருடன் பாதுகாப்புப் படையும் உடன் இருக்கிறது.

எங்குமே எந்த சந்தேகமும் வரவில்லை. சாலையோரம் ஒரே ஒரு ஆதரவற்ற டிரக் மட்டும் இருக்கிறது. அது பல நாள்களாக இருக்கிறது. அதில் ஒரு சின்ன மாற்றம். அதில்தான் எல்லா ஆயுதங்களும் மறைத்துவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அங்கு இஸ்ரேல் வீரர்கள் யாரும் இல்லை. அனைத்தும் இஸ்ரேலிலிருந்து ரிமோட் மூலம் இயக்கப்படுகிறது.

சரியாக..

கார், டிரக் அருகே வருகிறது.
அந்த டிரக் இருந்த இடம் மிகச் சரியாக வேகத் தடுப்புக்கு முன்பு.
கார் வேகத் தடுப்பை அணுகுவதற்காக வேகம் குறைக்கிறது.
மிகத் துல்லியமாக டிரக்கிலிருந்து துப்பாக்கிகள் இயங்குகின்றன.

தோள்பட்டையில் குண்டு பாய்ந்து ஃபக்ரிசாதே விழுகிறார். தன்னைப் பாதுகாத்துக் கொள்ள காரிலிருந்து வெளியே வந்து மறைந்துகொண்ட அவரை, துப்பாக்கிகள் துளைக்கின்றன. அவர் பலியாகிறார். மூன்று குண்டுகள் அவரை சாய்க்கின்றன.

அந்தக் காரில்தான் அவரது மனைவியும் இருந்தார். ஆனால் அவர் மீது குண்டுகள் துளைக்கவில்லை. காரணம், அந்த துப்பாக்கிகளுக்கு முகத்தை அடையாளம் காணும் ஃபேஷியல் ரெகக்னேஷன் மென்பொருள் இணைக்கப்பட்டிருந்ததுதான். அது ஃபக்ரிசாதேவை அடையாளம் கண்டு உறுதி செய்துகொண்டுதான் துப்பாக்கியை இயக்குகிறது. இரண்டு சுற்றுகள்.. 15 குண்டுகள். ஃபக்ரிசாதே பலியாகிறார். அதோடு, இஸ்ரேல் திட்டம் முடியவில்லை. அந்த டிரக் வெடித்துச் சிதறுகிறது. அதிலிருந்த இஸ்ரேலின் ஆயுதங்கள் தூள் தூளாகின்றன. அந்த துண்டுகளை எடுத்து ஈரான் சோதித்தபோதுதான், மொசாட்டின் மூளை இது என்பது தெளிவாகிறது. ஆனால் ஈரானால் அதனை உறுதி செய்ய முடியவில்லை.

இந்தக் கருவிகள் அனைத்தும் அடையாளம் தெரியாத சிறு சிறு துண்டுகளாக ஈரானுக்குள் கடத்திச் செல்லப்பட்டு, அங்குதான் அவை கருவிகளாக மாற்றப்பட்டு, டிரக்கு பல காலமாக திட்டமிட்டு நிறுத்தப்பட்டு அதில் அவை பொருத்தப்பட்டுள்ளன என்பது அனைத்தும் ஈரானின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டவை.

இப்படி, வெளியுலகுக்கு அடையாளம் தெரியாமல் வைத்திருந்த விஞ்ஞானியை, இஸ்ரேல் மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி, துல்லியமாக தீர்த்துக் கட்டியபோதே, இரு நாடுகளுக்கும் இடையே மூண்டிருந்த பகைக்கு தீ வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

இதுவரை இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தாக்குதலுக்கு முன்பும், பின்பும், அந்நாட்டு அதிபர் பேசிய சூசகமான ஒரு சில வார்த்தைகளே புரிஞ்சவங்க பிஸ்தா என்று சொல்ல வைத்திருக்கிறது.

இஸ்ரேல் மீது ஏவப்படும் செஜ்ஜில் ஏவுகணை! அவ்வளவு மோசமானதா? முழு விவரம்

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடங்கியிருக்கும் மிக பயங்கர சண்டையில், தனது மிக நீண்டத் தொலைவு இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன்படைத்த செஜ்ஜில் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்த இருப்பதை தெஹ்ரான் உறுதி செய்தி... மேலும் பார்க்க

ஈரான் மீதான இஸ்ரேஸ் தாக்குதல்: டிரம்ப்புக்கு பின்னடைவா? பெரு வெற்றியா?

‘ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் உலக அமைதிக்கான மிக முக்கிய படி. இதன் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு முடிவுக்கு வந்தது’ஈரானின் அணுசக்தி, ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகால... மேலும் பார்க்க

கலவர பூமியாகும் லாஸ் ஏஞ்சலீஸ்! அமைதி திரும்புமா?

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நகரான லாஸ் ஏஞ்சலீஸுக்கு இப்படியொரு சோதனை வரும் என இந்த மக்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த நகரின் பெயர் இப்படியொரு காரணத்துக்காக உச்சரிக்கப்பட வேண்டும் என்று எப்போதுமே விர... மேலும் பார்க்க

பெருந்துயரமாக மாறிய கொண்டாட்டம்!

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 5 பெண்கள் உள்பட 11 போ் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில், பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற... மேலும் பார்க்க

நா காக்க...காவாக்கால்...?

கன்னடமொழிக்கும் நடிகா் கமல்ஹாசனுக்கும் மிகவும் நெருங்கிய தொடா்பு உண்டு. இதை நடிகா் கமல்ஹாசனும் பலமுறை கூறியிருக்கிறாா். கன்னட மக்களுக்கும் கமல்மீது அளவில்லா அன்பு உண்டு என்பதை பலமுறை வெளிப்படுத்தி இர... மேலும் பார்க்க

கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் முதல்வர் மு. கருணாநிதியால், அனேகமாக நாட்டிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இரு சமூகநலத் திட்டங்கள் இப்போதும் செயற்படுத்தப்பட்டுப் பொன்விழா காண்கின்றன.சரி... மேலும் பார்க்க