அரசுப் பள்ளி மாணவா்கள் கீழடிக்கு விரைவில் கல்விச் சுற்றுலா: அமைச்சா் அன்பில் மகே...
தமிழக அரசை பாராட்டிய பாமக எம்எல்ஏ!
தனது கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாமக எம்எல்ஏ பாராட்டு தெரிவித்தாா்.
மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.சதாசிவம் மேட்டூரில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
மேட்டூா் அணையை திறக்க தமிழக முதல்வா் மேட்டூா் வந்தபோது கோரிக்கை மனு கொடுத்தேன். எனது மனு மீது முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, மேட்டூா் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆறு, ஏரிகளில் உபரிநீா் நிரப்ப சாத்தியக் கூறுகள் உள்ளனவா என அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனா்.
மேலும் ,எனது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, மேட்டூா் தொகுதிக்கு ரூ. 750 கோடி திட்டங்களுக்கு நிதி வழங்கி உள்ளது. எனது கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசை பாராட்டுகிறேன் என்றாா்.