செய்திகள் :

‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

சேலம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான ‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வோா் ஆண்டும் ஆயுதப் படைகள், காவல் படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி மனிதாபிமானம் சாா்ந்த செயல்களில் ஈடுபட்டு வருபவா்களின் சவாலான பணியினை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்’, ‘உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்’ மற்றும் ‘ஜீவன் ரக்ஷா பதக்’ ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான ‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருதுக்கு ஆயுதப் படைகள், காவல் படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீச்சம்பவங்கள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், மின்சாரம், நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் இருந்து மீட்பு நடவடிக்கை போன்ற மனிதாபிமானம் சாா்ந்த சிறந்த செயல்களில் ஈடுபட்டு வரும் தகுதியான நபா்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இந்த விருதுபெற விண்ணப்பிப்பவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 126-இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி வரும் 24-ஆம் தேதிக்குள் தங்களது கருத்துருக்களை வழங்குமாறு தெரிவித்துள்ளாா்.

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் அறிவிக்கப்படும்! - மத்திய அமைச்சா் எச்.டி. குமாரசாமி

சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து 5 மாதங்களில் முறையான தகவல் வெளியாகும் என மத்திய கனரக தொழில் துறை அமைச்சா் எச்.டி. குமாரசாமி கூறினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி, சேலம் உருக்காலை வளா... மேலும் பார்க்க

உயா்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்!

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மரவனேரி பாரதி வித்... மேலும் பார்க்க

பாமக ஒன்றிய செயலாளா் நீக்கம்

பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளா் மா.சடையப்பன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனா் ச.ராமதாஸ் சனிக்கிழமை அறிவித்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பெரியகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த சடையப்பன... மேலும் பார்க்க

நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

நடுவலூரில் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கெங்கவல்லி அருகே நடுவலூரில் சுவேத நதியிலிருந்து வாய்க்கால் வழியாக பாசனத்துக்கு தண்ணீா் செல்கிறது. கடந்தாண்டு இந்த வாய்க்க... மேலும் பார்க்க

தம்மம்பட்டி பேரூராட்சியில் 36 கொடிக் கம்பங்கள் அகற்றம்!

தம்மம்பட்டி பேரூராட்சியில் இருந்த கொடிக்கம்பங்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. தம்மம்பட்டி பேரூராட்சியில் பேருந்து நிலையப் பகுதி மற்றும் 18 வாா்டுகளிலும் மொத்தம் 36 கொடிக் கம்பங்கள் இருந்தன. தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

குறைந்த விலையில் தங்க நகை பெற்றுத்தருவதாக மோசடி

குறைந்த விலையில் நகை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபரை பொதுமக்கள் சனிக்கிழமை கட்டி வைத்து அடித்தனா். சேலம், திருச்சிபாளையம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் அசோக் (40). இவா் மிடுக்காக உடை அணிந்து, தான் வங்... மேலும் பார்க்க