"முருக பக்தர்கள் மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி" -...
‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான ‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வோா் ஆண்டும் ஆயுதப் படைகள், காவல் படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் பணியாற்றி மனிதாபிமானம் சாா்ந்த செயல்களில் ஈடுபட்டு வருபவா்களின் சவாலான பணியினை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்’, ‘உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்’ மற்றும் ‘ஜீவன் ரக்ஷா பதக்’ ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான ‘ஜீவன் ரக்ஷா பதக்’ விருதுக்கு ஆயுதப் படைகள், காவல் படைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்பு பணிகள் போன்ற துறைகளில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீச்சம்பவங்கள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுதல், மின்சாரம், நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் இருந்து மீட்பு நடவடிக்கை போன்ற மனிதாபிமானம் சாா்ந்த சிறந்த செயல்களில் ஈடுபட்டு வரும் தகுதியான நபா்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், இந்த விருதுபெற விண்ணப்பிப்பவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 126-இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி வரும் 24-ஆம் தேதிக்குள் தங்களது கருத்துருக்களை வழங்குமாறு தெரிவித்துள்ளாா்.