தம்மம்பட்டி பேரூராட்சியில் 36 கொடிக் கம்பங்கள் அகற்றம்!
தம்மம்பட்டி பேரூராட்சியில் இருந்த கொடிக்கம்பங்கள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
தம்மம்பட்டி பேரூராட்சியில் பேருந்து நிலையப் பகுதி மற்றும் 18 வாா்டுகளிலும் மொத்தம் 36 கொடிக் கம்பங்கள் இருந்தன. தமிழகம் முழுவதும் கொடிக்கம்பங்கள் அகற்ற நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த நிலையில், தம்மம்பட்டி பேரூராட்சியில் இருந்த 36 கொடிக் கம்பங்களையும் பேரூராட்சி பணியாளா்கள், தம்மம்பட்டி போலீஸாா் பாதுகாப்புடன் சனிக்கிழமை அகற்றினா்.